செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 குழந்தைகள் பலி

Published On 2018-12-17 09:48 GMT   |   Update On 2018-12-17 09:48 GMT
உ.பி. மாநிலம் நொய்டா மாவட்டத்தில் இன்று பள்ளியின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. #SchoolWallCollapse #NoidaSchool
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் நொய்டா மாவட்டத்தில் உள்ள சாலாப்பூர் கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை பள்ளியின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.



தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 குழந்தைகள் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #SchoolWallCollapse #NoidaSchool
Tags:    

Similar News