செய்திகள்
கருமத்தம்பட்டி அருகே சொகுசு கார் மோதி கணவன்-மனைவி பலி
கோவை கருமத்தம்பட்டி அருகே மொபட் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூலூர்:
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பரி பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மாரத்தாள் (55). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கணியூர் டோல்கேட் அருகே சென்றனர். அப்போது கோவை நோக்கி வந்த சொகுசு கார் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பூரை சேர்ந்த தினேஷ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பரி பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மாரத்தாள் (55). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கணியூர் டோல்கேட் அருகே சென்றனர். அப்போது கோவை நோக்கி வந்த சொகுசு கார் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பூரை சேர்ந்த தினேஷ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.