என் மலர்
நீங்கள் தேடியது "couple dies"
- 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
- சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஆரணி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது37). இவரது மனைவி கலையரசி. இவர்கள் 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.
இந்த நிலையில் அய்யனார் பாளையம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர்.
இன்று அதிகாலை ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் ரெயில் சென்றபோது சிவகண்டன் கதவை திறந்து கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஓடும் ரெயிலில் இருந்து சிவகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கலையரசி கணவனை காப்பாற்ற முயன்றார்.
அப்போது 2 பேரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இதைபார்த்த சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிந்து வந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 72). இவரது மனைவி கஸ்தூரி பாய் (65). இவர்களுடைய ஒரே மகள் திருமணமாகி கணவருடன் விருதுநகரில் வசித்து வருகிறார்.
ஆனந்தராஜும், அவரது மனைவியும் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் சிறிய பெட்டிக் கடை நடத்தி வந்தனர்.
நேற்று இரவு கடையை மூடி விட்டு இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் தீப்பிடித்தது.
மேலும் கியாஸ் சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் ஆனந்தராஜ், அவரது மனைவி கஸ்தூரி பாய் ஆகியோர் உடல் துண்டாகியும், கருகியும் பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்ததும் மறைமலைநகர், சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் குடிசை முழுவதும் இடிந்து தரை மட்டமானது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலானது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. மின் கசிவினால் ஏற்பட்ட தீயில் கியாஸ் சிலிண்டர் வெடித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
2 பேரின் உடலையும் காயார் போலீஸ் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பரி பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மாரத்தாள் (55). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கணியூர் டோல்கேட் அருகே சென்றனர். அப்போது கோவை நோக்கி வந்த சொகுசு கார் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பூரை சேர்ந்த தினேஷ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள திருவேங்கடநாதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது38). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரத்தினம் (32). இவர்களுக்கு அதிசயா (9), சுபஸ்ரீ (6) என்ற இரு மகள்கள் உள்ளனர்.
சங்கரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று அவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். மதுபோதையில் இருந்த அவர் மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சங்கரன் திடீரென அங்கிருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனே மனைவி ரத்தினம் அவரை காப்பாற்ற முயன்றார். இந்த சம்பவத்தில் இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சங்கரன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த ரத்தினத்திற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் ரத்தினம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-மனைவி தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews






