search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருமத்தம்பட்டி அருகே சொகுசு கார் மோதி கணவன்-மனைவி பலி
    X

    கருமத்தம்பட்டி அருகே சொகுசு கார் மோதி கணவன்-மனைவி பலி

    கோவை கருமத்தம்பட்டி அருகே மொபட் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    சூலூர்:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள மோப்பரி பாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 60). விசைத்தறி உரிமையாளர். இவரது மனைவி மாரத்தாள் (55). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் கணியூர் டோல்கேட் அருகே சென்றனர். அப்போது கோவை நோக்கி வந்த சொகுசு கார் மொபட் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கணவன்-மனைவி இருவரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருப்பூரை சேர்ந்த தினேஷ் பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.
    Next Story
    ×