செய்திகள்

கொள்ளிடம் கடைவீதியில் தேங்கி கிடக்கும் மழை தண்ணீர்- பொதுமக்கள் அவதி

Published On 2018-12-07 15:28 GMT   |   Update On 2018-12-07 15:28 GMT
நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியில் மழை நீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் கொள்ளிடம் கடை வீதியின் மையப்பகுதியில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை பெய்யும் போது 20 மீட்டர் தூரத்திற்கு மழை நீர் தேங்கி விடுகிறது. இந்த மழை நீர் வடிய குறைந்த பட்சம் 3 அல்லது 4 நாட்கள் ஆகிறது. 

சாதாரணமாக குறைந்த அளவு மழை பெய்தாலும் சாலையின் நடுவே தண்ணீர் தேங்கி விடுகிறது. ஒரு பகுதி பள்ளமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. சாலையில் தண்ணீர் தொடர்ந்து தேங்கி வருவதால் வாகனங்கள் செல்லும் போதும், சாலையோரத்தில் நடந்து செல்லும்போதும், சகதியுடன் சேர்ந்த தண்ணீர் படுவதால் சாலையில் செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும் வீசுகிறது. 

இதனால் கடை வியாபாரிகள் சிரமம் அடைகின்றனர். எனவே கொள்ளிடத்தின் மையப்பகுதியில் பள்ளமாக உள்ள தேசிய நெடுஞ்சாலையை சரிபடுத்தவும் தண்ணீரை உடனடியாக வடியவைக்கவும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
Tags:    

Similar News