search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
    X

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளில் இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் குலுங்கின. #Pakistan #EarthQuake
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதிகளான பெஷாவர் ஆகிய இடங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் துறை தெரிவித்துள்ளது.

    அமெரிக்க புவி ஆய்வு மையம் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படுள்ளதாக கூறியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. கட்டிடங்கள் குலுங்கியதாகவும், மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 
    Next Story
    ×