search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெஷாவர்"

    • சில வருடங்களாக, பாகிஸ்தானில் பல இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன
    • தற்போது வரை குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை

    பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது, கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa) பிராந்தியம்.

    இதன் தலைநகரம், பெஷாவர் (Peshawar).

    கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் பல இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இன்று காலை, இந்நகரில் போர்ட் பஜார் (Board Bazaar) பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.

    இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் பலத்த காயமடைந்தார்.

    காயமடைந்தவர் அங்குள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் (Lady Reading Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    வெடித்த குண்டுகள், 4லிருந்து 5 கிலோகிராம் வரை எடை கொண்டவை என்றும் நடைபெற்றது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.

    தற்போது வரை குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.

    அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையின் முக்கிய பிரிவு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம்" என தெரிவித்தார்.

    பெஷாவர் நகரை மையமாக வைத்து "பாகிஸ்தானி தலிபான் குழு" (TTP) என அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வந்தனர் என்பதும் சுமார் 1 மாதத்திற்கு முன்பாக பலூசிஸ்தான் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் சுமார் 30 பேர்  உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×