என் மலர்tooltip icon

    செய்திகள்

    • இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.
    • இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். பின்னர் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

    இவ்விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பின் ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டியதால் டிரம்ப் பணிந்தார். இந்தியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக தெரிவித்தார்.

    இந்தநிலையில் இந்தியா மீதான 50 சதவீத வரிக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையை உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி, டெபோரா ராஸ், மார்க் வீசே ஆகியோர் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளனர்.

    அதில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதித்த அதிபர் டிரம்பின் தேசிய அவசர கால அறிவிப்பை முடி வுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த நடவடிக் கைகள் சட்டவிரோத மானவை மற்றும் அமெ ரிக்கத் தொழிலாளர்கள், நுகர்வோர், இருதரப்பு உறவுகளுக்குத் தீங்கு விளைவிப்பவை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் டெபோரா ராஸ் எம்.பி கூறும்போது, வட கரோலினாவின் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு ஆகியவை ஒரு இந்திய அமெரிக்க சமூகத்தின் மூலம் இந்தியாவுடன் ஆழமாகப் பிணைக்கப்பட்டு உள்ளது.

    இந்திய நிறுவனங்கள் இந்த மாகாணத்தில் ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடு செய்து, உயிரி அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் ஆயிரக்கணக்கான வேலை களை உருவாக்கியுள்ளன.

    அதேபோல் வட கரோ லினா உற்பத்தியாளர்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்றார்.

    இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறும்போது, இந்த வரிகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து அமெரிக்கத் தொழிலாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.

    மேலும் நுகர்வோருக்கான செலவுகளை அதிகரிக்கின்றன. இந்த வரி விதிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்கா- இந்தியா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உதவும் என்றார். இந்த தீர்மானத்தில் பிரேசில் மீதான வரியையும் ரத்து செய்ய முன்மொழியப்பட்டு உள்ளது.

    • ஆறு மாநகராட்சிகளில் நான்கை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
    • எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது. 

    ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

    திருவனந்தபுரம் மாநகராட்சியை வென்றதன் மூலம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கேரளாவில் காலூன்றி உள்ளது.

    UDF மற்றும் NDA இரண்டிலிருந்தும் கடுமையான சவாலை எதிர்கொண்ட போதிலும், கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே LDF தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

    திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு மற்றும் கண்ணூர் உள்ளிட்ட சில பாரம்பரிய கோட்டைகளை LDF வென்ற போதிலும், 2020 ஆம் ஆண்டு செயல்திறனுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த செயல்திறன் குறைவே.

    ஒட்டுமொத்தமாக, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் மறுமலர்ச்சிக்கான அறிகுறியாகும்.     

    • முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.
    • பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்த பாலஸ்தீன நகரமான காசாவில் 'பைரன்' புயல் பாதிப்பால் 14 பேர் உயிரிழந்தனர்.

    புயலில் நான்கு பேர் இறந்த நிலையில் புயலை தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் காற்று காரணமாக கூடாரம் இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் இறந்தனர். போரில் அழிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தின் சுவர் கூடாரத்தின் மீது விழுந்ததில் இரண்டு பேர் இறந்தனர்.

    கடுமையான குளிரால் உறைந்து சில குழந்தைகளும் இறந்தனர். முந்தைய நாள் கடுமையான குளிரின் காரணமாக கான் யூனிஸில் எட்டு மாத குழந்தை இறந்தது.

    வரும் நாட்களில் காசாவில் கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள 850,000 பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

    போரில் வீடுகள் அழிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் தற்போது தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் கூடாரங்கள் தொடர்ந்து இடிந்து விழுகின்றன. மக்கள் குளிர் மற்றும் கனமழையில் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    இஸ்ரேல் தாக்குதல்களை தொடர்ந்து எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சேதமடைந்த உபகரணங்கள் காரணமாக வெள்ளம் மற்றும் குளிரை எதிர்த்துப் போராடுவது சாத்தியமில்லை என்று உள்ளூர் நிர்வாகம் கூறியுள்ளது.   

    • ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.
    • மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கான நிதியை விடுவிக்காததால் விடுதி காப்பாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தத்தங்குடியில் இயங்கிவரும் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிய மகேந்திரன் என்பவரை மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு காப்பாளராக, மாற்றுப் பணியில் இந்த அரசு பணிமாற்றம் செய்தது.

    வயதான தாய், தந்தை மற்றும் கைக் குழந்தையுடன் உள்ள தனது குடும்பத்திற்கு, தனது நேரடி உதவி அவசியம் என்பதால், தன்னை மீண்டும் ஆசிரியர் பணிக்கு பணி மாறுதல் செய்து தருமாறு ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும், தனது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி கடந்த 4 மாதங்களாக வழங்காததால், தனது கைப்பணத்தையும், கடன் வாங்கியும் செலவு செய்ததாகவும், இதனால் தனது குடும்பத்தையும்

    பராமரிக்க முடியாமல், மாணவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக்

    குறிப்பிட்டுள்ளார்.

    இவற்றையெல்லாம் குறிப்பிட்டு உடனடியாக தனக்கு பழைய பணிக்கே மாறுதல் வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார். இந்நிலையில் அவரது கடிதத்திற்கு எந்தவிதமான பதிலும் வராததாலும், பணக் கஷ்டத்தினாலும், குடும்பத்தைவிட்டு பிரிந்து இருந்ததினாலும் மன அழுத்தம் ஏற்பட்டு, மூன்று நாட்களுக்கு முன் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

    விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களை இந்த அரசு தொடரவில்லை.

    மேலும், ஸ்டாலினின் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தது முதல் ஆதிதிராவிடர் நலத் துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது என்று, எனது பல

    அறிக்கைகளிலும், பேட்டிகளிலும், சட்டமன்றத்திலும் எடுத்து வைத்துள்ளேன்.

    எனினும், தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு

    ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வானளாவிய விளம்பரம்

    செய்கிறதே தவிர, உண்மையில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவுப் படியைக்கூட பல மாதங்களாக முழுமையாக

    வழங்காததால், ஆதிதிராவிட நல மாணவர் விடுதிக் காப்பாளர்களே சொந்தப் பணத்தை செலவு செய்து, மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

    எனது முந்தைய அறிக்கைகளில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் தங்கும் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் வெளியாட்கள் தங்குவதையும், தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியாக உணவு வழங்கப்படாத நிலையையும்; தென்காசி மாவட்டம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க, அனைத்திந்திய அண்ணா

    திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு வார்டு உறுப்பினர் 5.10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும், குடிநீர் வழங்காமல் காலம் தாழ்த்தியதையும்; புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் குறித்து, இதுவரை உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும்; ஒவ்வொரு வருடமும் மத்திய அரசிடமிருந்து ஆதிதிராவிடர் மக்களுக்கு வரும் மத்திய நிதியை

    முழுமையாக செலவிடாமல், பெரும்பாலான நிதியை திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில், ஸ்டாலினின் திமுக அரசு ஆதிதிராவிட மக்களுக்கு எதிராக செயல்படுவதை எனது

    முந்தைய அறிக்கைகளில் ஏற்கெனவே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

    விடியா திமுக அரசின் ஆதிதிராவிட நலத்துறை தமிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு உணவுப் படிகளை முழுமையாக வழங்காததால், விடுதிக் காப்பாளர்களே பல மாதங்களாக தங்கள் சொந்தப் பணத்தைச் செலவிட்டு ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு உணவு வழங்கி வருவதாகவும், இதன் காரணமாக, விடுதிப் காப்பாளர்கள் மிகந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    தாழ்த்தப்பட்டவர்களுக்கான அரசு, திமுக அரசு என்று எப்போதும் கூறிக்கொள்ளும் மு.க. ஸ்டாலினின் 55 மாதகால விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கான நலத் திட்டங்களைச் செய்வதாக விளம்பரம் மட்டும் வருகிறதே தவிர, எந்தவித புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.

    விடியா திமுக ஆட்சியில், ஆதிதிராவிட மக்களுக்கான நலத் திட்டங்கள் முழுமையாகச் சென்றடைவதில்லை. குறிப்பாக, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு உரிய காலதில் நிதியை விடுவிக்காத விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், இனியாவது ஆதிதிராவிட மாணவர் விடுதிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்குமாறும், விடுதிக் காப்பாளர் மகேந்திரன் தற்கொலை செய்துகொள்ளக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அளிப்பதுடன், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்குமாறும், பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2025-ம் ஆண்டில் 10 விளையாட்டு வீரர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.
    • அதில் ஒரு விளையாட்டு வீரர் இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு இந்த ஆண்டே விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

    திருமணமான பலர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற கோர்ட்டுக்கு செல்வது அதிகமாக உள்ளது. பிரபலங்கள் முதல் ஏழை எளிய மக்களும் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்வது தற்போதைய காலங்களில் எளிதாக மாறிவிட்டது.

    அந்த வகையில் 2025-ம் ஆண்டில் விவாகரத்து பெற்ற விளையாட்டு வீரர்கள் குறித்த தகவலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.

    அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுஸ்வேந்திர சாஹல். அவர் அவரது மனைவி தனஷ்ரீ வர்மா (Dhanashree Verma, நடனக் கலைஞர் மற்றும் யூடியூபர்) உடனான திருமணம் வாழ்க்கை 2020-ல் தொடங்கியது. அவர்கள் 2023 முதல் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், மார்ச் 2025-ல் விவாகரத்து உறுதிப்படுத்தப்பட்டது.


    முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக். 2025 தொடக்கத்தில் அவரது மனைவி ஆர்த்தி அஹ்லாவத் (Aarti Ahlawat) உடனான திருமணத்தில் பிரிவு ஏற்பட்டதாக பல வதந்திகள் பரவின. அவர்கள் சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்க்கை வாழ்ந்த பிறகு, சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் அன்ஃபாலோ செய்ததாகவும், தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.


    ரியான் லோச்டே (Ryan Lochte): ஒலிம்பிக் நீச்சல் வீரர். அவரது மனைவி கெய்லா ரீட் (Kayla Reid) ஜூன் 4, 2025 அன்று விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.


    டைரீக் ஹில் (Tyreek Hill): NFL (அமெரிக்கன் கால்பந்து வீரர்) மியாமி டால்பின்ஸ் அணி. அவரது மனைவி கீடா (Keeta) ஏப்ரல் 2025 இல் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இது அவர்களது இரண்டாவது முறை விவாகரத்து முயற்சி.


    டிராவிஸ் ஹண்டர் (Travis Hunter): NFL வீரர். அவரது மனைவி லீனா லெனீ (Leanna Lenee) ஆகஸ்ட் 2025-ல் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார், மேலும் $40 மில்லியன் இழப்பீடு கோரினார். இவர்கள் இந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


    மாட் கலில் (Matt Kalil): முன்னாள் NFL வீரர். அவரது மனைவி ஹேலி கலில் (Haley Kalil) நவம்பர் 2025 இல் விவாகரத்து கோரினார். அவர்களது பிரிவுக்கு அவரது உடல் அளவு தொடர்பான பிரச்சினைகள் காரணமாகக் கூறப்பட்டது.


    இமான் ஷம்பெர்ட் (Iman Shumpert): முன்னாள் NBA (பாஸ்கெட்பால்) வீரர். மார்ச் 2025 இல் அவரது மனைவி டெயானா டெய்லர் (Teyana Taylor) உடனான விவாகரத்து இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.


    பாஸ்டியன் ஷ்வெயின்ஸ்டெய்கர் (Bastian Schweinsteiger): முன்னாள் கால்பந்து வீரர் (ஜெர்மன்). டிசம்பர் 2025-ல் அவரது மனைவி அனா இவானோவிச் (Ana Ivanovic) உடனான 9 ஆண்டு திருமணம் முடிவுக்கு வந்தது. அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.


    அனா இவானோவிச் (Ana Ivanovic): முன்னாள் டென்னிஸ் வீராங்கனை (செர்பியன், முன்னாள் உலக நம்பர் 1). மேலே குறிப்பிட்ட அதே வழக்கில், அவர் நவம்பர் 2025-ல் விவாகரத்து கோரினார்.


    ஆஸ்கர் டி லா ஹோயா (Oscar De La Hoya): பாக்ஸிங் வீரர். நவம்பர் 2025-ல் அவரது மனைவி மில்லி கோரெட்ஜர் (Millie Corretjer) உடனான விவாகரத்து தீர்வு அடைந்தது. அவர்களது பிரிவு 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.



    • இந்தாண்டு பல நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர்.
    • இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர்

    2025 ஆம் ஆண்டு இந்திய திரை பிரபலங்களுக்கு மகழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. சினிமா வாழ்க்கை மட்டுமில்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும் இந்த வருடம் புதிய வெளிச்சம் பெற்றது.

    பல நடிகர், நடிகைகள் தங்கள் வாழ்க்கையில் அம்மா, அப்பா என்ற புதிய பொறுப்பை பெற்றனர். இந்த வருடம் குழந்தை பெற்ற திரை பிரபலங்கள், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த விதமும் அதற்கு ரசிகர்கள் பொழிந்த வாழ்த்து மழையும் இணையத்தை ஆக்கிரமித்தன.

    அவ்வகையில் 2025-இல் குழந்தை பெற்ற இந்திய திரை பிரபலர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

    1. சினேகன் - கன்னிகா:

    தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.

    பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இந்தாண்டு துவக்கத்தில் இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு காதல் கவிதை என நடிகர் கமல்ஹாசன் பெயர் சூட்டினார். 

    2. பிரேம்ஜி:

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு இந்தாண்டு இறுதியில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை 'வல்லமை' பட இயக்குநர் கருப்பையா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துனர். தனது 47 வயதில் பிரேம்ஜி தந்தையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    3. விஷ்ணு விஷால்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா என்பவரை 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு இந்தாண்டு துவக்கத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஷ்ணு விஷால் - ஜுவாலா குட்டா தம்பதியின் மகளுக்கு 'மிரா' என நடிகர் அமிர்கான் பெயர் சூட்டினார். 

     4. மாதம்பட்டி ரங்கராஜ்... ஜாய் கிரிசில்டா

    தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டதாக சமையல் கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையின் அப்பா நான் தான் என்று ஒப்புக்கொள்ளாத மாதம்பட்டி ரங்கராஜ், DNA பரிசோதனை தயார் என்று தெரிவித்துள்ளார். 

    5. விக்கி கவுசல் - கத்ரீனா கைப்

    பாலிவுட் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் விக்கி கவுசல்-கத்ரீனா கைப். இவர்களது திருமணம் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தாண்டு இறுதியில் அவர்களுக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது.

    6. கியாரா அத்வானி

    பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் நடிப்பில் இந்தாண்டு கேம்சேஞ்சர், வார் 2 படங்கள் வெளியாகின.

    கியாரா அத்வானி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை கடந்த 2023-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடந்தது.

    இதையடுத்து கியாரா அத்வானி தாய்மை அடைந்திருப்பதை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இந்தாண்டு இறுதியில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.


    7. பரினீதி சோப்ரா

    பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராகவ் சதா. இவர் நடிகை பரினீதி சோப்ராவை கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தை பிறந்தது.

     8. ராஜ்குமார் ராவ்

    பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், 2021 ஆம் ஆண்டு பத்ரா லேகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

    இந்தாண்டு ராஜ்குமார் ராவ் - பத்ரா லேகா தம்பதிக்கு இந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த தம்பதி தங்களது 4 ஆம் ஆண்டு திருமண நாளில் பெற்றோர் ஆகியுள்ளனர். ராஜ்குமார் ராவ் கடைசியாக 'மாலிக்' மற்றும் 'பூல் சுக் மாஃப்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

    • 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
    • பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இன்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.

    அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்புரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பபதாவது:-

    திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக- என்டிஏ கூட்டணி வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். கேரள மாநில மக்களின் விருப்பம், வளர்ச்சியை எங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

    திருவனந்தபுரம் போன்ற துடிப்பான நகரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை
    • பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.

    பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, பிரஜின் ஆகியோர் வெளியேறினார்கள்.

    இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரம்யா ஜோ வெளியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் கடந்த 50 நாட்களாக என்ன செய்கிறார் என்று தெரியாமலேயே இருந்த ரம்யா ஜோ தற்போது வெளியேறியுள்ளார்.

    • பஞ்சாபில் ரூ.500 கோடி கொடுப்பவருக்கே முதலமைசசர் பதவி வழங்கப்படுவதாக நவ்ஜோத் கவுர் கருத்து.
    • நீங்கள் ஏன் மது மற்றும் சுரங்க மாபியாக்களுக்குத் துணைபோகிறீர்கள்?

    முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர். பஞ்சாப் காங்கிரசில் தலைவராக இருந்தார். இதற்கிடையே பஞ்சாபில் ரூ.500 கோடி கொடுப்பவருக்கே முதலமைசசர் பதவி வழங்கப்படுவதாக நவ்ஜோத் கவுர் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

    இதையடுத்து அவரை கட்சியில் இருந்து காங்கிரஸ் சஸ்பெண்டு செய்தது. இந்த நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானிடம் நவ்ஜோத் கவுர் வலியுறுத்தி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,"எனக்கு இப்போது சில பாதுகாப்பு தேவை என்று நினைக்கிறேன், இல்லையென்றால் அதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். மேலும், பஞ்சாப் கவர்னர் நான் எழுப்பிய பிரச்சினைகள் குறித்து உங்கள் தரப்பிலிருந்து ஏன் எந்த பதிலும் இல்லை என்பதை தயவுசெய்து விளக்குங்கள்?

    நீங்கள் ஏன் மது மற்றும் சுரங்க மாபியாக்களுக்குத் துணைபோகிறீர்கள்?" என்றார். மேலும், சமீபத்தில் பஞ்சாப் கவர்னரை சந்தித்தபோது தான் எழுப்பிய பிரச்சினைகளை குறிப்பிடும் மனுவின் நகலையும் அவர் பதிவிட்டுள்ளார்.

    • ரேவந்த் ரெட்டி தனது கால்பந்து வேடிக்கைக்காக ரூ.100 கோடி பொது மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.
    • இதே பணத்தை சிங்கரேணி தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடலாம்.

    திருப்பதி:

    அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி கலந்து கொள்ளும் கால்பந்து போட்டி தெலுங்கானா மாநிலம், ஐதராபாத், ரெட் ஹில்சில் உள்ள சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

    அவருடன் படம் எடுக்க ரூ.10 லட்சம் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெஸ்ஸி வருகைக்காக அதிகளவில் பணம் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு தெலுங்கானா பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    கால்பந்து போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. சட்டமன்றக் எதிர் கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான மகேஷ்வர் ரெட்டி தலைமையில் நேற்று சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டனர்.

    போலீசார் அவர்களை போலீசார் தடுத்தபோது பதட்டமான சூழல் ஏற்பட்டது. சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர்.பா.ஜ.க தலைவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது மகேஸ்வர் ரெட்டி கூறுவையில்:-

    முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தனது கால்பந்து வேடிக்கைக்காக ரூ.100 கோடி பொது மக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டினார்.

    இதே பணத்தை சிங்கரேணி தொழிலாளர்களின் நலனுக்காக செலவிடலாம். நாட்டின் சிறந்த கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான சிங்கரேணி மைதானம் கால்பந்து கண்காட்சிக்காக உழப்படுகிறது.

    மெஸ்ஸிக்கு அரசாங்கம் எந்தத் துறைகளிலிருந்து பணத்தை எடுத்தது. அது எப்படி செலவிடப்படுகிறது என்பதை நீங்கள் எங்களிடம் சொல்ல வில்லை என்றால், நாங்கள் கால்பந்து போட்டியை தடுத்து நிறுத்துவோம்.

    முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் மக்கள் உங்களுடன் கால்பந்து விளையாடுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார். 

    • சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள் தங்கியிருந்தனர்.
    • அங்கு ஆராய்ச்சி பணிகள் நிறைவடைந்ததும் ஜூலை 15-ம் தேதி பூமி திரும்பினர்.

    புதுடெல்லி:

    வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் வேதா. அவர் பாடத்தை எளிமையாக புரியும்படி நடத்துவதால் மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தின் மீது தனி மரியாதை.

    அவர் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் அறிவியல் துறை சார்ந்த வேலைகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம் என அவரிடம் தெரிவித்திருந்தனர்.

    அன்று முதல் வகுப்பு அறிவியல்.வேதா சார் வழக்கம்போல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, சார் உள்ளே வரலாமா என பாண்டியன் கேட்டான்.

    ஏண்டா லேட் என கேட்ட வேதா சார், சரி உள்ளே வந்து பாடத்தைக் கவனி என்றார்.

    அன்றைய பாடத்தில் விண்வெளி பயணம் குறித்த செய்தி வெளியானதைப் பற்றி மாணவர்கள் அவரிடம் கேட்டனர்.

    அப்போது விண்வெளி துறையில் இந்தியா செய்துள்ள சாதனைகள் பற்றி விரிவாகக் கூறிய வேதா சார், விண்வெளி பயணம் பற்றியும் எடுத்துரைத்தார். சமீபத்தில் லக்னோவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டதையும் விளக்கினார்.

    வேதா சார் சொன்னதன் சாராம்சம் இதுதான்:


    இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா (39). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்சியம் ஸ்பேஸ் எனும் தனியார் நிறுவனத்தின் 'ஆக்சியம்-4' திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில் சுக்லாவுடன் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

    அவர்கள் 4 பேரும் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாட்கள்வரை தங்கி, பயிர்கள் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டனர். ஆராய்ச்சி பணிகள் நிறைவடைந்ததும் கடந்த ஜூலை 15-ம் தேதி பூமி திரும்பினர்.

    சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் பயணித்த விண்கலம் வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    இதன்மூலம் 41 ஆண்டுகளில் தனியார் விண்வெளிப் பயணத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்று திரும்பிய முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார்.

    விண்வெளி சென்று திரும்பிய சுபான்ஷு சுக்லா அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையம் வந்த சுக்லாவை அவரது குடும்பத்தினர் மற்றும் மத்திய மந்திரிகள், டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா உள்பட பலர் வரவேற்றனர்.

    சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது சுக்லா, விண்வெளியில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து விவரித்தார்.


    மேலும், சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் மேற்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதை வரவேற்று மத்திய மந்திரிசபை தீர்மானம் நிறைவேற்றி பாராட்டு தெரிவித்தது.

    உத்தர பிரதேச மாநிலம் லக்னோவைப் பூர்வீகமாகக் கொண்ட சுபான்ஷு சுக்லா, இந்திய விமானப்படை அதிகாரி மற்றும் இஸ்ரோவின் 'ககன்யான்' திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆசிரியரின் விளக்கத்தைக் கேட்ட மாணவர்கள், சார் அப்போ நாமும் வருங்காலத்தில் விண்வெளிக்கு சுற்றுப்பயணம் செய்யலாமா என ஆவலுடன் கேட்டனர்.

    கண்டிப்பாக, விண்வெளி பயணம் விரைவில் சாத்தியமாகி விடும் என பதிலளித்தார் வேதா சார். அத்துடன் அவரது வகுப்பும் முடிந்தது.

    மாணவர்கள் அனைவரும், டேய் இன்னும் ஒரு 10 வருஷத்துலே நாம் விண்வெளியில மீட் பண்ணுவோம்டா என அடுத்த வகுப்புக்கு தயாராகினர்.

    • இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
    • பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடம் மீது கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் நடத்திய இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

    இந்த நிகழ்வு வருடந்தோறும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தாக்குதலில் வீர மரணடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    தாக்குதல் நினைவாக பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ×