search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருமா?- திமுக மனு உச்ச நீதிமன்றத்தில் 28ம் தேதி விசாரணை
    X

    3 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருமா?- திமுக மனு உச்ச நீதிமன்றத்தில் 28ம் தேதி விசாரணை

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் 28ம் தேதி விசாரிக்க உள்ளது. #LSPolls #TNByelection #DMK
    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.



    திமுகவின் கோரிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை வரும் 28-ம் தேதி (வியாழக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்கும். தேர்தலை நடத்த சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறினால், அதற்கான காரணத்தை கேட்டு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என தெரிகிறது. #LSPolls #TNByelection #DMK
    Next Story
    ×