என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - நாராயணசாமி பேட்டி
Byமாலை மலர்2 Feb 2019 9:20 AM GMT (Updated: 2 Feb 2019 9:20 AM GMT)
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை ஆதரிக்கும் அதிமுக, பா.ஜனதாவுடனான கூட்டணியை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். #Narayanasamy #BJP #ADMK
சென்னை:
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் வேளையில் மத்திய பட்ஜெட் ஒரு வருடத்துக்கான பட்ஜெட்டாக பியூஷ் கோயல் போட்டு இருக்கிறார்.
2025, என நீண்ட கால திட்டத்தை அறிவித்து இருக்கிறார். ஜனநாயக முறைப்படி இந்த பட்ஜெட் 3 மாதத்திற்கானதாக தான் இருக்க வேண்டுமே தவிர ஒரு ஆண்டுகால பட்ஜெட்டாக இருக்கக்கூடாது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்த பட்ஜெட் போடப்பட்டு இருக்கிறது.
சுமார் 12 கோடி விவசாயிகள் இதனால் பலனடைவார்கள் என கூறியிருக்கிறது. இதற்க்கு தேவையான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும் என கூறவில்லை. விவசாயிகளை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை சலுகைகளாக அறிவித்து உள்ளது.
ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டாம் என திட்டத்தை அறிவித்து வரி செலுத்துபவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த சலுகைகளை எல்லாம் வருகின்ற அரசு நிறைவேற்ற வேண்டுமே தவிர எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோல்வியுறும்.
வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு, பணவீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, பொருளாதார வீழ்ச்சி அடைந்த நிலை இந்த சூழ்நிலையில் ஒரு கவர்ச்சியான பட்ஜெட்டை மக்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. இந்திய மக்களுக்கு நரேந்திர மோடி அரசின் தந்திரங்கள் எல்லாம் தெரியும்.
தமிழக விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் பல போராட்டங்கள் நடத்தி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மோடி அரசு இதை கண்டுகொள்ளாத நிலையில் இதுபோன்ற திட்டங்களை அறிவித்து இருப்பதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சியை நரேந்திர மோடியைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழக அரசானது நரேந்திரமோடி நிழலாக செயல்படுகிறது. பாஜகவின் பி-டீமாக அ.தி.மு.க. செயல்படுகிறது
பாராளுமன்றத்தில் நரேந்திர மோடியை ஆதரிக்கிறார்கள். ஆனால் பாஜக கூட்டணி இல்லை என்று கூறுகிறார்கள். இது இரட்டை வேடம்.
தமிழகம், புதுவை மக்களை பா.ஜனதா வஞ்சித்து வருகிறது. பா.ஜனதாவுடனான கூட்டணியை அ.தி.மு.க. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #BJP #ADMK
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் வேளையில் மத்திய பட்ஜெட் ஒரு வருடத்துக்கான பட்ஜெட்டாக பியூஷ் கோயல் போட்டு இருக்கிறார்.
2025, என நீண்ட கால திட்டத்தை அறிவித்து இருக்கிறார். ஜனநாயக முறைப்படி இந்த பட்ஜெட் 3 மாதத்திற்கானதாக தான் இருக்க வேண்டுமே தவிர ஒரு ஆண்டுகால பட்ஜெட்டாக இருக்கக்கூடாது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி இந்த பட்ஜெட் போடப்பட்டு இருக்கிறது.
சுமார் 12 கோடி விவசாயிகள் இதனால் பலனடைவார்கள் என கூறியிருக்கிறது. இதற்க்கு தேவையான நிதி ஆதாரம் எங்கிருந்து கிடைக்கும் என கூறவில்லை. விவசாயிகளை ஏமாற்ற பொய்யான வாக்குறுதிகளை சலுகைகளாக அறிவித்து உள்ளது.
ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி கட்ட வேண்டாம் என திட்டத்தை அறிவித்து வரி செலுத்துபவர்களுக்கு சலுகை வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த சலுகைகளை எல்லாம் வருகின்ற அரசு நிறைவேற்ற வேண்டுமே தவிர எத்தனை சலுகைகள் அறிவித்தாலும் மோடி அரசு தோல்வியுறும்.
வேலைவாய்ப்பின்மை, பணமதிப்பிழப்பு, பணவீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, பொருளாதார வீழ்ச்சி அடைந்த நிலை இந்த சூழ்நிலையில் ஒரு கவர்ச்சியான பட்ஜெட்டை மக்களுடைய வாக்குகளை பெற வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் மத்திய அரசு தாக்கல் செய்திருக்கிறது. இந்திய மக்களுக்கு நரேந்திர மோடி அரசின் தந்திரங்கள் எல்லாம் தெரியும்.
தமிழக விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் பல போராட்டங்கள் நடத்தி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மோடி அரசு இதை கண்டுகொள்ளாத நிலையில் இதுபோன்ற திட்டங்களை அறிவித்து இருப்பதை மக்கள் நம்ப மாட்டார்கள்.
நாட்டினுடைய பொருளாதார வீழ்ச்சியை நரேந்திர மோடியைத் தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. தமிழக அரசானது நரேந்திரமோடி நிழலாக செயல்படுகிறது. பாஜகவின் பி-டீமாக அ.தி.மு.க. செயல்படுகிறது
பாராளுமன்றத்தில் நரேந்திர மோடியை ஆதரிக்கிறார்கள். ஆனால் பாஜக கூட்டணி இல்லை என்று கூறுகிறார்கள். இது இரட்டை வேடம்.
தமிழகம், புதுவை மக்களை பா.ஜனதா வஞ்சித்து வருகிறது. பா.ஜனதாவுடனான கூட்டணியை அ.தி.மு.க. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Narayanasamy #BJP #ADMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X