search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP Coalition"

    பா.ஜ.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறினார். #MuralidharRao #BJP
    புதுச்சேரி:

    பா.ஜனதா சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் தொடர்பாக அனைத்து சமுதாய மக்களிடமும் நேரடியாக கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    புதுவை மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகளை கேட்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.

    கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை வருகிற 14-ந் தேதி (நாளை) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு தெரிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #BJP

    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். #OPS #BJP
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 75 நாட்களே உள்ளதால் அதை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    தமிழ்நாட்டில் எதிர்கட்சியான தி.முக. காங்கிரசுடன் கூட்டணி வைக்கப்போவதாக அறிவித்துவிட்டது.

    இந்த கூட்டணியில் மார்க். கம்யூனிஸ்டு, இந்திய. கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைகின்றன.



    பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேரலாம் என்று கூறப்படுகிறது. என்றாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

    வருகிற 18-ந்தேதி பா.ஜனதா மூத்த தலைவர் பியூஸ்கோயல் சென்னை வந்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்பிறகே பா.ஜனதா கூட்டணி பற்றிய முழு விவரம் தெரியவரும்.

    இந்த நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை விமான நிலையத்தில் தேர்தல் கூட்டணி சம்பந்தமான கேள்விக்கு பதில் அளித்தார். அவரது பேட்டி:-

    கே:- பா.ஜனதாவுடன் 2004-ல் அ.தி.மு.க. கூட்டணி வைத்தது. தி.மு.க.வும் கூட்டணி வைத்திருக்கிறது. பழைய நண்பர்களை கூட்டணியில் சேர்க்க கதவு திறந்து இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அதை ஏற்று பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைக்குமா?

    ப:- தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    கே:- பிரதமர் வர இருக்கிறார். வருகிற 18-ந்தேதி தமிழகம் வரும் மத்திய மந்திரி பியூஸ்கோயல் உங்களை சந்திக்க இருப்பதாகவும், அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி உறுதியாகி விட்டதாகவும், இடங்கள் ஒதுக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறதே?

    ப:- பிரதமர் வருவதோ, சந்திப்பதோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பியூஸ் கோயல் எங்களை சந்திப்பது பற்றியும் எந்த தகவலும் இல்லை. சில ஊடகங்கள் அவர்களாகவே இது போன்ற செய்திகளை வெளியிடுகிறார்கள்.

    கேள்வி: கொடநாடு பிரச்சினையில் முதல்-அமைச்சர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளதே?

    பதில்:- இது 2 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். சக்தியற்ற எதிர்கட்சிகள் அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க முடியாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்பி வருகின்றன. அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். அது நடக்காது.

    எதிர்க்கட்சிகளின் பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்வோம். நியாயம் எங்கள் பக்கம் உள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கே:- உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததற்கு அ.தி.மு.க.தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே?

    ப:- உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள முடியாமல், கோர்ட்டுக்கு சென்றது தி.மு.க.தான். நாங்கள் தேர்தலை சந்திக்க பயப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #OPS #BJP

    அ.தி.மு.க, பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருவதால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க. இணையும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறினார். #RamdasAthawale #ParliamentaryElection
    ஆலந்தூர்:

    மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆட்சியை தக்க வைக்கும். பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி நடத்துகிறார். ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களின் நல்வாழ்வுக்கு பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.



    இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரையும் மோடி அரவணைத்து செல்கிறார். எனவே மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் அமையும். வரும் பாராளுமன்ற தேர்தல் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் இடம்பெற போகிறது.

    ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. நாடு முழுவதும் 80 இடங்களை பிடிப்பது சிரமம். காங்கிரஸ் கட்சி மீண்டும் எதிர்க்கட்சியாக தான் அமரும்.

    தமிழகத்தை பொறுத்த வரை ஏற்கனவே முதல்-அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தனர். மத்திய அரசு மக்களுக்கு தரும் நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

    அதே போலதான் தமிழகத்தில் ஆளும் தற்போதைய அ.தி.மு.க. அரசும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுடன் இணக்கமாக உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற மேல்-சபை துணை தலைவர் தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்தது. அதேபோன்று நாங்களும் பாராளுமன்ற துணை சபா நாயகர் தம்பிதுரைக்கு (அ.தி.மு.க.) தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறோம்.

    அ.தி.மு.க-பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே வரும் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. சேரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RamdasAthawale #ParliamentaryElection
    பாஜக கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று குமாரசாமி நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Kumaraswamy #KarnatakaAssemblyelection

    பெங்களூர்:

    கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள பா.ஜனதாவும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி காங்கிரசுடன் இணைந்தும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன.

    இந்த நிலையில் பெங்களூரில் இன்று மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் குழு தலைவராக குமாரசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்த கூட்டத்துக்கு முன்னதாக குமாரசாமி நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரசுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என நாங்கள் முடிவு செய்து விட்டோம். இதன் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இந்த முடிவை மாற்றுவது குறித்த கேள்விக்கே இடமில்லை.

    பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை. அந்த கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kumaraswamy #KarnatakaAssemblyelection

    ×