search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muralidhar Rao"

    தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார். #LokSabhaElections2019 #MuralidharRao
    சென்னை:

    பா.ஜ.க. பொதுச் செயலாளரும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான முரளிதர்ராவ் சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 5 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின்போது தேசத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த தேர்தலில் பா.ஜ.க. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வெற்றியை விட இந்த தேர்தலில் வெற்றி அதிகமாக இருக்கும்.

    காங்கிரஸ் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவின் ஒற்றுமை, வலிமை, அரசியல் நாகரீகம் போன்றவற்றுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்.

    தேசம் பாதுகாப்பாக இருக்காது. நாட்டின் நலனுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நாட்டின் முக்கிய பிரச்சினைகளை கூட கவனத்தில் கொள்ள முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது.



    இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மறுநாளே தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்றும் கூறுகிறார். இது எதை காட்டுகிறது.

    தேர்தல் இல்லாமல் ஆட்சி எப்படி மாறும். தேர்தல் இல்லாமலோ அல்லது வேறு வழியிலோ ஆட்சியை பிடிக்கலாம் என்ற தி.மு.க.வின் நோக்கத்தை தான் இது காட்டுகிறது. இதற்காக தான் தி.மு.க., காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கிறது. ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் காரணம்.

    நாட்டின் வளர்ச்சி, ஊழலை ஒழிப்பது போன்றவற்றை மக்கள் விரும்புகின்றனர். இதை பா.ஜ.க.வால் மட்டுமே தர முடியும். தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தமட்டில் மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும் என்ற ஒற்றை கோஷம் மட்டுமே உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பா.ஜ.க. மாநில ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத் உடன் இருந்தார்.  #LokSabhaElections2019 #MuralidharRao
    நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது என்று முரளிதரராவ் கூறியுள்ளார். #LokSabhaElectoins2019 #MuralidharRao

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தேர்தல் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. இந்தியா முழுவதும் மிக வேகமாக பிரசாரம் செய்து வருகிறது. கண்டிப்பாக பா.ஜ.க தனி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் ஆட்சி அமைக்க உள்ளது.

    300 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும். தமிழ் நாட்டில் வெற்றி எப்படி இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    2014-ல் வெவ்வேறு கூட்டணிகளுடன் சேர்ந்து 19 சதவீத வாக்குகளைப் பெற்றோம். தென்னிந்தியாவில் முக்கிய மாநிலம் தமிழ்நாடு.


    இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து அதிக பாராளுமன்ற உறுப்பினரை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்ப உள்ளோம். அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் முழு எழுச்சி பெற்றுள்ளது.

    தி.மு.க.-காங்கிரஸ் கட்சியில் இந்திய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் இவர்கள் தான் தலைமை என்று மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

    தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் உள்ள இளைஞர்களுக்கு “நமோ வாரியார்” என்ற தலைப்பில் பேச உள்ளேன்.

    நாடும் நமதே நாற்பதும் நமதே என்பது பா.ஜ.க.வின் நோக்கம் மற்றும் லட்சியமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElectoins2019 #MuralidharRao

    கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டது என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #BJP
    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்த பிறகும் அவர்களுடைய கூட்டணி கட்சி தலைவர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தி.மு.க. செல்வாக்கு இழந்து விட்டது. இழந்த செல்வாக்கை மீண்டும் பெற காங்கிரசுடன் கைகோர்த்துள்ளது.



    இந்த பாராளுமன்ற தேர்தலில் “மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முத்திரை வாசகத்தை பயன்படுத்தி எங்கள் பிரசாரத்தை தொடங்க இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே நாங்கள் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளோம். தமிழகத்தில் இந்த கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #BJP

    பா.ஜ.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறினார். #MuralidharRao #BJP
    புதுச்சேரி:

    பா.ஜனதா சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் தொடர்பாக அனைத்து சமுதாய மக்களிடமும் நேரடியாக கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    புதுவை மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகளை கேட்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.

    கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை வருகிற 14-ந் தேதி (நாளை) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு தெரிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #BJP

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் மோடி முறையாக அறிவிப்பார் என்று மதுரையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது முரளிதர ராவ் கூறினார். #MuralidharRao #PMModi #Parliamentelection
    அவனியாபுரம்:

    மதுரை பெருங்குடி அருகே உள்ள மண்டேலா நகர் ரிங் ரோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, பா.ஜ.க. மாநாடு நடைபெறும் இடங்களை மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பின்னர் முரளிதர ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசியல், கலை, பண்பாடு ஆகியவற்றில் மதுரை முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்கு பிரதமரின் முதல் கூட்டம் நடைபெறுவது சிறப்பு வாய்ந்தது.

    வருகிற 27-ந் தேதி நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா மற்றும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து குறிப்பாக 10 பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து 2 லட்சம் தொண்டர்கள், மோடியை வரவேற்க தயாராக உள்ளனர்.

    2014-ல் இருந்து பா.ஜ.க. அரசு இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு கூடும் முதல் கூட்டம் என்பதால் பெரும் வரவேற்பு உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் 4 வழிச்சாலை, கப்பல் போக்குவரத்து துறை, மருத்துவ காப்பீடு, பாதுகாப்பு துறை தளவாட உற்பத்தி ஆகிய துறைகளில் பெரும் சாதனை புரிந்துள்ளோம்.



    பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் மட்டுமே முடிவு செய்வார்கள். அது பற்றி நாங்கள் கூற முடியாது.

    தி.மு.க., அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி என்று பலர் கருத்து கூறுகின்றனர். ஆனால் தேர்தல் அறிவிப்பு வந்தவுடன்தான் கூட்டணி அறிவிப்பு வரும். அதனை பிரதமர் மோடி முறையாக அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #PMModi  #Parliamentelection

    ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த பெண் 9 மணி நேரத்தில் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #congress #PadminiReddy
    நகரி:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் தாமோதர ராஜ நரசிம்மா. இவர் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் திட்ட கமிட்டி தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பத்மினி ரெட்டி. காங்கிரஸ் உறுப்பினர்.

    இந்த நிலையில் பத்மினி ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்தார். இதற்கான விழா நேற்று மதியம் 12 மணியளவில் பா.ஜனதா தலைவர் லஷ்மன், தேசிய தலைவர் முரளிதரராவ் தலைமையில் ஐதராபாத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்மினி ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. மாறாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

    பா.ஜனதாவில் சேர்ந்த பத்மினி ரெட்டி பேசுகையில், மோடியால் தான் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முடியும். எனவேதான் நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தேன்’’ என்றார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட கமிட்டி தலைவரின் மனைவி பா.ஜனதாவில் இணைந்தது அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் பத்மினி ரெட்டி பா.ஜனதாவில் இருந்து 9 மணி நேரத்தில் விலகினார். மதியம் 12 மணிக்கு பா.ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் இரவு 9 மணியளவில் அதில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

    இரவு 9 மணிக்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாக கூறினார். தொண்டர்களின் மனநிலையை மதித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததாக அவர் தெரிவித்தார். #BJP #congress #PadminiReddy
    திமுக தலைவரும், மிக மூத்த அரசியல் தலைவருமான கருணாநிதிக்கான புகழ் வணக்க கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக நிதின் கட்கரி மற்றும் முரளிதர் ராவ்-வும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Karunanidhi
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7–ம் தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு புகழ் வணக்க கூட்டங்கள் நடத்த தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்தது. தமிழகத்தில் முக்கிய நகரங்களில் கூட்டம் நடைபெற்று வருகிறது. நிறைவாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் வருகிற 30–ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னையில் 30–ம் தேதி நடைபெறும் கருணாநிதி புகழ் வணக்க கூட்டத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என தகவல் வெளியானது. இந்த தகவல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அமித் ஷாவிற்கு அழைப்பு விடுத்தது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் இருந்து விமர்சனங்களும் எழுந்தது.
     
    இந்நிலையில் பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி தனது ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், “தி.மு.க கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கபோவதில்லை என முடிவு செய்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது,” என்று குறிப்பிட்டார். இருப்பினும் அமித்ஷா கலந்துக்கொள்வார் எனவே தகவல்கள் பரவி வந்தது.

    இந்த சர்ச்சைக்கு முடிவுகட்டும் நிலையில், பா.ஜ.க தரப்பில் இருந்து மத்திய போக்குவரத்துறை மந்திரி நிதின் கட்கரியும், தேசிய செயலாளர் முரளிதர் ராவ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனவும், அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BJP #Karunanidhi
    திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டுகிறேன் என டிடிவி தினகரன் மற்றும் பாஜக தலைவர்கள் டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளனர். #Karunanidhi #Dinakaran #MuralidharRao #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை மேற்கொண்டார். அப்போது அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த டிரக்யாஸ்டமி செயற்கை சுவாச குழாய் மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

    இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலத்தில் நலிவு ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால் திமுக தலைவர் கருணாநிதியை பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    இதேபோல், திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டும் என பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘திரு. கருணாநிதியின் உடல் நலனுக்காக நான் பிராத்திக்கிறேன். விரைவில் அவர் பூரணகுணமடைவார் என நம்புகிறேன், அவரது பரந்த அரசியல் அனுபவம் தமிழ்நாடு மற்றும் தேசிய மக்களின் நலனுக்கு பயனளிப்பதாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

    மேலும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைவர் கலைஞர் அவர்கள் பூரண நலம் பெற நான் வணங்கும் இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார். #Karunanidhi #Dinakaran #MuralidharRao #TamilisaiSoundararajan
    ×