search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐதராபாத்தில் பா.ஜனதாவில் சேர்ந்து 9 மணி நேரத்தில் காங்கிரசுக்கு திரும்பிய பெண்
    X

    ஐதராபாத்தில் பா.ஜனதாவில் சேர்ந்து 9 மணி நேரத்தில் காங்கிரசுக்கு திரும்பிய பெண்

    ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்த பெண் 9 மணி நேரத்தில் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #BJP #congress #PadminiReddy
    நகரி:

    ஐதராபாத்தை சேர்ந்தவர் தாமோதர ராஜ நரசிம்மா. இவர் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் திட்ட கமிட்டி தலைவராக இருக்கிறார். இவரது மனைவி பத்மினி ரெட்டி. காங்கிரஸ் உறுப்பினர்.

    இந்த நிலையில் பத்மினி ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்தார். இதற்கான விழா நேற்று மதியம் 12 மணியளவில் பா.ஜனதா தலைவர் லஷ்மன், தேசிய தலைவர் முரளிதரராவ் தலைமையில் ஐதராபாத்தில் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்மினி ரெட்டி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு பதவி ஏதும் வழங்கப்படவில்லை. மாறாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

    பா.ஜனதாவில் சேர்ந்த பத்மினி ரெட்டி பேசுகையில், மோடியால் தான் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல முடியும். எனவேதான் நான் பா.ஜனதா கட்சியில் இணைந்தேன்’’ என்றார்.

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட கமிட்டி தலைவரின் மனைவி பா.ஜனதாவில் இணைந்தது அங்கு பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்த நிலையில் பத்மினி ரெட்டி பா.ஜனதாவில் இருந்து 9 மணி நேரத்தில் விலகினார். மதியம் 12 மணிக்கு பா.ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் இரவு 9 மணியளவில் அதில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

    இரவு 9 மணிக்கு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டதாக கூறினார். தொண்டர்களின் மனநிலையை மதித்து மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததாக அவர் தெரிவித்தார். #BJP #congress #PadminiReddy
    Next Story
    ×