என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் முடிவு அறிவிப்பு - முரளிதரராவ்
Byமாலை மலர்13 Feb 2019 8:37 AM GMT (Updated: 13 Feb 2019 8:37 AM GMT)
பா.ஜ.க. கூட்டணி பற்றி ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்று பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் கூறினார். #MuralidharRao #BJP
புதுச்சேரி:
பா.ஜனதா சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் தொடர்பாக அனைத்து சமுதாய மக்களிடமும் நேரடியாக கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
புதுவை மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகளை கேட்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.
கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை வருகிற 14-ந் தேதி (நாளை) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு தெரிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #BJP
பா.ஜனதா சார்பில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய வாக்குறுதிகள் தொடர்பாக அனைத்து சமுதாய மக்களிடமும் நேரடியாக கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
புதுவை மீனவ சமுதாய மக்களின் கோரிக்கைகளை கேட்கும் நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்தில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் பங்கேற்று மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதே போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணி அமைப்பது உறுதியாகிவிட்டது.
கூட்டணியில் எந்ததெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை வருகிற 14-ந் தேதி (நாளை) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்துக்கு வந்து சென்ற பிறகு தெரிவிக்கப்படும். இன்னும் சில தினங்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #MuralidharRao #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X