search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை அருகே காற்றழுத்தம் - டெல்டா மாவட்டங்களுக்கு மீண்டும் மழை வாய்ப்பு
    X

    புதுவை அருகே காற்றழுத்தம் - டெல்டா மாவட்டங்களுக்கு மீண்டும் மழை வாய்ப்பு

    புதுவை அருகே காற்றழுத்தம் காரணமாக டெல்டா மாவட்டங்களுக்கு மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain

    சென்னை:

    தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென் மேற்கு வங்கடல் மற்றும் அதனையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிவரை பரவியுள்ளது.

    இது தமிழக கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்தமாக மாறி தமிழகத்தையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.

    இதன் காரணமாக இன்றும், நாளையும், தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதியில் பரவலாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை காற்றழுத்தம் புதுவையை நெருங்கும். அதன்பிறகு நாகை-வேதாரண்யம் நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரையும் அதிகபட்சமாக 60 கி.மீ. வரையும் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் தெற்கு மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காற்றழுத்தம் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழை காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சாலையில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. மேலும் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது.

    மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் சுற்று வட்டார பகுதிகளிலும் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில இடங்களில் மழை தூரியது. #Rain

    Next Story
    ×