என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது
ஈரோடு:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்போது ஆர்ப்பாட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. வன்முறையை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத் தினர். இதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழ்ந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது.
இன்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக நாம் தமிழர் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
ஸ்டெர்லெட் ஆலையை மூட வலியுறுத்தியும், பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொன்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசையும், காவல்துறையை கண்டித்தும் முற்றுகையிட போவதாக அறிவித்திருந்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் கலெக்டர் அலுவலகத்தை சுற்றி நின்றிருந்தனர்.
மாநகர் மாவட்ட செயலாளர் மாதையன், மாநகர மாவட்ட தலைவர் ரகுபதி தலைமையிலான நாம் தமிழர் கட்சியினர் ஈரோடு டீச்சர்ஸ் காலனி அருகே ஒன்றாக திரண்டனர். பின்னர் போலீசாரை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியவாறு வந்தனர்.
இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் டீச்சர் காலனி பிரிவில் தடுப்பு வேலிகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் பெருந்துறைக்கு செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்