search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிசூலம் மலையில் வெடிகுண்டுடன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மிரட்டல்- 5 பேர் சிக்கினர்
    X

    திரிசூலம் மலையில் வெடிகுண்டுடன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மிரட்டல்- 5 பேர் சிக்கினர்

    சென்னை விமான நிலையத்தை தகர்க்க திரிசூலம் மலையில் வெடிகுண்டுடன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மிரட்டல் விடுத்த போதை வாலிபர்கள் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.
    தாம்பரம்:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம வாலிபர் ஒருவர் பேசினார்.

    அப்போது, "சென்னை விமான நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் வெடிகுண்டுடன் திரிசூலம் மலையில் உள்ள வீடுகளில் பதுங்கி இருக்கிறார்கள்" என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்துக்கும், பல்லாவரம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்து உஷார்படுத்தினர்.

    உடனடியாக பல்லாவரம் போலீசார் திரிசூலம் மலைப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் யாரும் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தி நிம்மதி அடைந்தனர். இதையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்து பேசியவரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியில் இருப்பது தெரிந்தது.

    இதைத் தொடர்ந்து திரிசூலம் மலைப்பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர்கள் அங்கு மது போதையில் இருந்த அதே பகுதியை சேர்ந்த முஸ்தபா, அவரது நண்பர்கள் சாமுவேல், அருணகிரி, தினேஷ்குமார் பாலு என்பது தெரிந்தது.

    இவர்களில் முஸ்தபா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்து பேசியது தெரிந்தது. அவர் போலீசாரிடம் கூறும்போது, ‘‘நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது என்னை கிண்டல் செய்தனர். இதில் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

    எனவே நண்பர்களை போலீசில் சிக்க வைப்பதற்காக வெடிகுண்டுடன் பதுங்கி இருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தேன்’’ என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து முஸ்தபா உள்பட 5 பேரையும் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் திரிசூலம் பகுதி பரபரப்பாக காணப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×