என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கிரண்பேடி மத்திய பா.ஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்- அன்பழகன் குற்றச்சாட்டு
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தர விட்டும் மத்திய அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.
இதே போல புதுவை அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர கவர்னரிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி தர மறுத்துள்ளார்.
இதையடுத்து அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. மூலம் வழக்கு தொடர புதுவை அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் உரிமையை பெறாமல் தனி நபர் மூலம் வழக்கு தொடர்வது முன் உதாரணமாகி விடும்.
மாநில அரசின் உரிமையை விட்டு கொடுக்கும் நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும்.
தொடக்க நிலையில் இருந்தே காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக நாராயணசாமி செயல்பட்டு வருகிறார்.
இதே போல் கவர்னர் கிரண்பேடி மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்