என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தியாகதுருகம் அருகே ஆம்னி பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 2 டிரைவர்கள் பலி
Byமாலை மலர்20 March 2018 4:23 AM GMT (Updated: 20 March 2018 4:23 AM GMT)
தியாகதுருகம் அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தியாகதுருகம்:
சென்னையில் இருந்து கோவையை நோக்கி நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. கோவையை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 40) பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலத்தில் உள்ள சென்னை-கோவை புறவழிச்சாலையில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து சென்னைக்கு 30 பயணிகளுடன் மற்றொரு தனியார் ஆம்னி பஸ் அங்கு வந்தது. அதனை சென்னையை சேர்ந்த டிரைவர் அடைக்கலம் (45) ஓட்டினார். 2 தனியார் ஆம்னி பஸ்களும் மேம்பாலத்தில் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் 2 பஸ்சுகளும் பாலத்தில் கவிழ்ந்தன. பஸ்களின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர்கள் ரமேஷ் மற்றும் அடைக்கலம் ஆகியோர் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆம்னி பஸ்களில் வந்த சென்னையை சேர்ந்த நந்தகுமார், சதீஷ்குமார், மகேஷ்வரி, கோவையை சேர்ந்த கணேசன்,வித்யா, சீனாவை சேர்ந்த பப்பையா உள்ளிட்ட 35 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 35 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்துகுள்ளான பஸ்கள் பாலத்தில் கவிழ்ந்து கிடந்ததால் சென்னை-கோவை சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
சென்னையில் இருந்து கோவையை நோக்கி நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. கோவையை சேர்ந்த டிரைவர் ரமேஷ் (வயது 40) பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.
அந்த பஸ் இன்று அதிகாலை 3 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலத்தில் உள்ள சென்னை-கோவை புறவழிச்சாலையில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது கோவையில் இருந்து சென்னைக்கு 30 பயணிகளுடன் மற்றொரு தனியார் ஆம்னி பஸ் அங்கு வந்தது. அதனை சென்னையை சேர்ந்த டிரைவர் அடைக்கலம் (45) ஓட்டினார். 2 தனியார் ஆம்னி பஸ்களும் மேம்பாலத்தில் திடீரென நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதில் 2 பஸ்சுகளும் பாலத்தில் கவிழ்ந்தன. பஸ்களின் முன்பக்கம் முழுவதும் பலத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர்கள் ரமேஷ் மற்றும் அடைக்கலம் ஆகியோர் பஸ்சின் இடிபாடுக்குள் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆம்னி பஸ்களில் வந்த சென்னையை சேர்ந்த நந்தகுமார், சதீஷ்குமார், மகேஷ்வரி, கோவையை சேர்ந்த கணேசன்,வித்யா, சீனாவை சேர்ந்த பப்பையா உள்ளிட்ட 35 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயம் அடைந்த 35 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்துகுள்ளான பஸ்கள் பாலத்தில் கவிழ்ந்து கிடந்ததால் சென்னை-கோவை சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X