search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தியாகதுருகம்"

    • தியாகதுருகம் அருகே 2-வது திருமணம் செய்து கொண்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 41) இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே முடியனூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கவுசல்யா( 21) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் கவுசல்யா 2-வது திருமணம் செய்து கொண்ட மனவருத்தத்தில் இருந்ததார். சம்பவத்தன்று முடியனூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்த கவுசல்யா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவுசல்யா இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவருக்கு 2 வயதில் யோகேஸ் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×