என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் சிறையில் மேலும் ஒரு கைதி தற்கொலை
Byமாலை மலர்29 May 2017 11:49 PM GMT (Updated: 29 May 2017 11:49 PM GMT)
திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் குமார் என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் போரூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் குமார் என்ற இளைஞர் புழல்சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவறைக்கு சென்ற செந்தில் குமார் அங்கேயே தனது லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த மே 8-ஆம் தேதி இளைராஜா என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அண்ணா நகரில் ஆசிரியை நிவேதா என்பவரை கார் ஏற்றி கொலை செய்ததாக தீயணைப்பு துறை ஊழியர் இளைராஜா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த நாளே சிறை கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்வாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு புழல் சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து வருவதால், இதற்கு அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருவள்ளூர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம் போரூரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் குமார் என்ற இளைஞர் புழல்சிறையில் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழிவறைக்கு சென்ற செந்தில் குமார் அங்கேயே தனது லுங்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த மே 8-ஆம் தேதி இளைராஜா என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை அண்ணா நகரில் ஆசிரியை நிவேதா என்பவரை கார் ஏற்றி கொலை செய்ததாக தீயணைப்பு துறை ஊழியர் இளைராஜா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட அடுத்த நாளே சிறை கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
அதற்கு முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் ஸ்வாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு புழல் சிறையில் அடைக்கப்படும் கைதிகளின் தற்கொலை சம்பவம் தொடர்ந்து வருவதால், இதற்கு அரசு சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X