search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததை ஏற்க முடியாது- விராட் கோலி
    X

    கடைசி கட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததை ஏற்க முடியாது- விராட் கோலி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் அதிக ரன் விட்டுக்கொடுத்தது கிரிமினல் தனமானது என பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.#IPL2018 #RCB #CSK #ViratKohli
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 205 ரன் குவித்தும் பெங்களூர் அணி தோல்வியை தழுவியது. இதனால் அந்த அணி கேப்டன் விராட் கோலி மிகவும் வேதனை அடைந்துள்ளார். தோல்விக்குறித்து அவர் கூறுகையில், இந்த போட்டியில் பல வி‌ஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது.

    நாங்கள் பந்துவீசிய முறையை ஏற்றுக் கொள்ள முடியாது. கடைசி கட்டத்தில் அதிக ரன் விட்டுக்கொடுத்தது கிரிமினல் தனமானது. 72 ரன்னுக்கு 4 விக்கெட்டை கைப்பற்றிய பிறகும் சென்னையை கட்டுப்படுத்த முடியவில்லை. 200 ரன்னுக்கு மேல் எடுத்தும் வெற்றி பெறமுடியவில்லை என்றால் கஷ்டமாக இருக்கிறது என்றார்.#IPL2018 #RCB #CSK #ViratKohli
    Next Story
    ×