search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சூப்பர் கிங்ஸ்"

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் சிஎஸ்கே 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் 7-வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சிவம் துபே 52 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து விளையாடிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் சென்னை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முன்னதாக குஜராத் அணி மெதுவாக பந்து வீசியதாக அந்த அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    • சென்னை- குஜராத் அணிகள் நேற்று மோதிய ஆட்டத்தை பார்க்கவும் 54 டிக்கெட்களை வெற்றியாளர்களுக்கு வழங்கியது மின்மினி.
    • மின்மினி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள்.

    சென்னை:

    உலகின் முதல் தமிழ் ஹைப்பர்லோக்கல் சமூக ஊடக செயலியான 'மின்மினி', சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணியின் அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பார்ட்னர் ஆகியுள்ளது. மேலும், ஹேஷ்டேக் மின்மினி சிஎஸ்கே என்கிற போட்டியை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. தற்போது நடந்து வரும் பரபரப்பான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பை 'மின்மினி' அதன் பயனாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதாவது சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சி.எஸ்.கே விளையாடும் போட்டிகளை நேரில் பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை வழங்குகிறது மின்மினி.

    இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கு எளிதான சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி மின்மினி செயலியின் பயனர்கள் சி.எஸ்.கே அணி மீது தங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும், விருப்பத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் மின்மினி செயலியில் வீடியோ பதிவிட வேண்டும். ஒவ்வொரு வீடியோவும் குறைந்தது 30 நொடிகள் இருக்க வேண்டும், "#minminiCSK" என இந்த ஹேஷ்டேக் இடுவது கட்டாயம்.

    இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சி.எஸ்.கே. ஆட்டங்களை நேரில் பார்ப்பதற்கு தலா இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும். அத்துடன் போட்டியை ஸ்டேடியத்தில் பார்த்துக்கொண்டிருக்கும்போது வெற்றியாளர்கள் எடுக்கும் வீடியோ மற்றும் போட்டோ என அனைத்தையும் மின்மினியின் இன்ஸ்டாகிராம் பக்கத்துடன் இணைந்து பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.

    கடந்த 22-ந்தேதி சி.எஸ்.கே. களமிறங்கிய முதல் போட்டியைக் காண மின்மினி நடத்தும் #MinMiniCSK மூலம் 54 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் ஐ.பி.எல் போட்டியின் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சியையும் சி.எஸ்.கே அணியின் அட்டகாசமான முதல் ஆட்டத்தையும் நேரில் காணும் வாய்ப்பை பெற்றனர். மேலும் சென்னை- குஜராத் அணிகள் நேற்று மோதிய ஆட்டத்தை பார்க்கவும் 54 டிக்கெட்களை வெற்றியாளர்களுக்கு வழங்கியது மின்மினி.

    மின்மினி மூலம் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் அதிர்ஷ்டத்தை பெற்ற சேலத்தை சேர்ந்த ஹேமநாதன் என்ற பயனாளர் கூறுகையில், 'கிரிக்கெட்டின் தீவிர ரசிகனான எனக்கு இப்போது தான் முதல்முறையாக போட்டியை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டோனியை களத்தில் பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறியது. இந்த வாய்ப்பை வழங்கிய மின்மினிக்கு நன்றி' என்று குறிப்பிட்டார்.

    இந்த போட்டியின் வெற்றியாளர்கள் சி.எஸ்.கே ஆட்டம் நடக்கும் நாளிற்கு ஒரு நாள் முன்னதாக அறிவிக்கப்படுவார்கள், மின்மினி நடுவர்குழு வெளிப்படையான நடைமுறை மூலம் வெற்றியாளர்களை இறுதி செய்யும். மின்மினி சிஎஸ்கே என்ற இந்த போட்டி ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் முடியும் வரை நடைபெறும். எனவே மின்மினியின் பயனர்கள் மற்றும் சி.எஸ்.கே ரசிகர்கள் தங்களது படைப்புத்திறன் மற்றும் தங்களது அணி மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை பதிவிட்டு போட்டியில் வென்று சி.எஸ்.கே ஆட்டங்களை நேரில் காணும் வாய்ப்பை பெறலாம்.

    மின்மினி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள். பல புதுமையான வழிகளில் எங்களது பயனர்களுக்கு ஆச்சரியமான அனுபவத்தை கொடுக்க முயற்சி செய்து வருகிறோம் என்று மின்மினி செயலியின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

    • ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் விளாசினர்.
    • தீபக் சாஹர், முஸ்டாபிஜூர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது.

    ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரஷித் கான் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சாய் சுதர்சன் அதிகபட்சமாக 31 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி ) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர், முஸ்டா பிசுர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், டேரில் மிட்செல், பதிரனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக இது மாதிரியான ஆட்டத்தை நாங்கள் செயல்படுத்த வேண்டி இருந்தது.

    சேப்பாக்கம் ஆடுகளம் (முதல் 10 ஓவரில் 104 ரன்) எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதபோது நீங்கள் எப்படி பேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். பவர் பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு சென்றார்.

    ஷிவம் துபேயின் அதிரடி ஆட்டத்தை பார்த்து டோனி வியந்தார். அவர் சி.எஸ்.கே.வுக்கு வந்ததில் இருந்து அவருடன் டோனி இணைந்துப் பணியாற்றினார். மேலும் அவரது நம்பிக்கை அதிகமாக இருந்தது. எங்களது பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    குஜராத் அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சுப்மன் கில் கூறும்போது 'இந்த தோல்வி மூலம் நாங்கள் பாடம் கற்றோம். மாறுபட்ட அனுபவம் கிடைத்தது' என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 31-ந்தேதி விசாகப்பட்டினத்தில் சந்திக்கிறது. குஜராத் 3-வது போட்டியில் அதே தினத்தில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

    • பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ரன்னில் அவுட் ஆனார்.
    • சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது லீக் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துபே 51, ரச்சின், ருதுராஜ் ஆகியோர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான கில் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக சாய் சுதர்சன் இறங்கினார். சாஹா மற்றும் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹாவுக்கு பவுன்சர் பந்தை வீசி தலையில் அடிபட வைத்த தீபக் சாஹர் அடுத்த பந்திலேயே அவரது (21) விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த விஜய் சங்கர் 12, மில்லர் 21 ரன்னில் நடையைக் கட்டினர்.

    பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
    • இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதேபோல் குஜராத் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வென்று இருக்கின்றன.

    தசைப்பிடிப்பு காயத்தில் இருந்து மீண்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர் பதிரானா சென்னை அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இம்பேக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளது.

    • மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது
    • மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது

    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. அன்றைய தினம் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

    டோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் ருத்துராஜ் கெய்க்வாட் கேப்டனாக தன்னுடைய முதல் போட்டியில் களமிறங்கினார். இப்போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

    இதனையடுத்து, மார்ச் 26-ந் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. இதனால் சென்னை அணி வீரர்கள் சென்னையில் ஊர் சுற்றி பொழுது போக்கினர்.

    இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் கேப்டானான எம்.எஸ்.டோனி நேற்று இரவு மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்து ரசித்திருக்கிறார். பந்துவீச்சாளர் தீபக் சஹார் உடன் சென்று சென்னை சத்யம் திரையரங்கில் அவர் இப்படத்தை கண்டுகளித்துள்ளார். அப்போது படம் முடிந்து வெளியே வந்த டோனியை பார்த்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மலையாள சினிமாவில் 200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை மஞ்சும்மல் பாய்ஸ் படைத்துள்ளது. அது மட்டுமில்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ஐம்பது கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்நிலையில் தமிழில் பல முன்னணி ஹீரோக்கள் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை திரையில் பார்த்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரச்சின் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.
    • ஷிவம் துபே 27 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழகாமல் இருந்தார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்து 173 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்களும், தினேஷ் கார்த்திக் 26 பந்தில் 38 ரன்களும் அடித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரன் கணக்கை தொடங்கினார் ருதுராஜ் கெய்க்வாட். மறுமுனையில் ரவீந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அணியின் ஸ்கோர் 4 ஓவரில் 38 ரன்கள் இருக்கும்போது ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து ரவீந்திரா உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். சென்னை அணி 5.3 ஓவரில் 50 ரன்னைக் கடந்தது. அணியின் ஸ்கோர் 71 ரன்னாக இருக்கும்போது 7-வது ஓவரின் கடைசி பந்தில் ரவீந்திரா 15 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    ரகானே தனது பங்கிற்கு 19 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். டேரில் மிட்செல் 18 பந்தில் 2 சிக்சருடன் 22 ரன்கள் அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் சேர்த்தது.

    ரச்சின் ரவீந்திரா

    கடைசி ஐந்து ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது. துபே உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். 16-வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. 17-வது ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. இதனால் கடைசி 3 ஓவரில் 18 ரன்களே தேவைப்பட்டது. 18-வது ஓவரில் 8 ரன்கள் கிடைத்தது.

    இதனால் கடைசி 2 ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 18.4 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.

    ஷிவம் துபே 34 ரன்களுடனும், ஜடேஜா 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • அனுஜ் ராவத் 25 பந்தில் 48 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன்அவுட் ஆனார்.
    • முஸ்டாபிஜுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    டு பிளிஸ்சிஸின் அதிரடி ஆட்டத்தால் ஆர்சிபி முதல் 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது. இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. தீக்சனா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜத் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த 3 ஓவரில் (முதல் 3 ஓவருக்குப் பிறகு) 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

    விராட் கோலி மெல்லமெல்ல அதிரடிக்கு திரும்பிய நிலையில் முஸ்டாபிஜுர் ரஹ்மான் பந்தில் 20 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிந்தார். ரகானே பவுண்டரி லைனில் பந்தை பிடித்து ரச்சின் ரவிந்திராவிடம் தூக்கிப் போட்டார். அவர் கேட்ச் பிடித்தார். அதே ஓவரில கேமரூன் க்ரீன் க்ளீன் போல்டானார். அவர் 22 பந்தில் 18 ரன்கள் எடுத்தார்.

    இதனால் ஆர்சிபி 11.4 ஓவரில் 78 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது திணறியது.

    6-வது விக்கெட்டுக்கு அனுஜ் ராவத் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். இதனால் ஆர்சிபி 12 ஓவரில் 100 ரன்களை கடந்தது.

    18-வது ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்ஸ் அனுஜ் ராவத் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் ஆர்சிபி-க்கு 25 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 18.1 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.

    முஸ்டாபிஜுர் ரஹ்மான்

    19-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் ஆர்சிபி-க்கு 16 ரன்கள் கிடைத்தது. ஆர்சிபி 19 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்திருந்தது.

    கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சிஎஸ்கே-வுக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. சிஎஸ்கே அணி சார்பில் முஸ்டாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    அனுஜ் ராவத்- தினேஷ் கார்த்திக் ஜோடி 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • முஸ்டாபிஜுர் ரஹ்மான் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

    ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    விராட் கோலி நிதானமாக விளையாட டு பிளிஸ்சிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டு பிளிஸ்சிஸ் முதல் ஓவரில் ஒரு பவுண்டரியும், 2-வது பந்தில் 2 பவுண்டரியும் அடித்தார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 4 பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆர்சிபி 3 ஓவரில் 33 ரன்கள் எடுத்தது.

    இதனால் 4-வது ஓவரிலேயே சிஎஸ்கே சுழற்பந்து வீச்சை அறிமுகம் செய்தது. தீக்சனா 4-வது ஓவரில் 4 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    5-வது ஓவரை முஸ்டாபிஜுர் ரஹ்மான் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டு பிளிஸ்சிஸ் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்தில் 35 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதே ஓவரில் ரஜ் படிதாரை டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    அடுத்த ஓவரில் தீபக் சாஹர் மேக்ஸ்வெல்லை முதல் பந்திலேயே வெளியேற்றினார். இதனால் ஆர்சிபி 6 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி 3 ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இதற்கிடையே விராட் கோலி 8 பந்தில் 6 ரன் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 12 ஆயிரம் ரன்களை பூர்த்தி செய்தார்.

    ஆர்சிபி 9 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.

    • சிஎஸ்கே அணிக்கு முதன்முறையாக கேப்டனாக களம் இறங்குகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
    • சென்னை அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.

    ஐபிஎல் 2024 சீசன் தொடங்கியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கான டாஸ் 7.40 மணிக்கு சுண்டப்பட்டது. ஆர்சிபி அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சமீர் ரிஸ்வி அறிமுகம் ஆகியுள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விவரம்:-

    1. டு பிளிஸ்சிஸ், 2. விராட் கோலி, 3. ரஜத் படிதார், 4. மேக்ஸ்வெல், 5. கேமரூன் க்ரீன், 6. தினேஷ் கார்த்திக், 7. அனுஜ் ராவத், 8. கரண் சர்மா, 9 அல்சாரி ஜோசப், 10. மயங்க் தாகர், 11. முகமது சிராஜ்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:-

    1. ருதுராஜ் கெய்க்வாட், 2. ரச்சின் ரவீந்திரா, 3. ரகானே, 4. டேரில் மிட்செல், 5. ஜடேஜா, 6. சமீர் ரிஸ்வி, 7. எம்.எஸ். டோனி, 8. தீபக் சாஹர், 9. மஹீஷ் தீக்சனா, 10. முஸ்தாபிஜுர் ரஹ்மான், 11. துஷார் தேஷ்பாண்டே.

    • சென்னை அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • புதிய கேப்டன் நியமனம் குறித்து சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் நாளை சென்னையில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, சென்னை சூப்பர் கிங் அணி கேப்டனாக இருந்த டோனி மாற்றப்பட்டு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து டோனி மாற்றப்பட்டது ஏன் என்பது சென்னை அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பிளமிங் கூறியதாவது:

    புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என டோனி கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    டோனியின் ஆலோசனைப்படியே ருதுராஜ் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். வருங்கால திட்டங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜடேஜாவை கேப்டனாக நியமித்ததில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். ருதுராஜை கேப்டனாக்கும் முடிவுக்கு ஜடேஜாவும் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சீசனில் டோனியின் உடல்தகுதி மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி இருந்து வந்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 22) துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட துவக்க விழாவை தொடர்ந்து, இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில், சி.எஸ்.கே. அணியின் கேப்டன் பொறுப்பை எம்.எஸ். டோனி ருதுராஜ் கெய்க்வாட்-இடம் ஒப்படைப்பதாக அணி நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு டோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐ.பி.எல்.-இல் சென்னை அணி துவங்கப்பட்டதில் இருந்தே சி.எஸ்.கே. கேப்டனாக எம்.எஸ். டோனி செயல்பட்டு வந்தார்.

     


    இடையில், ஒரு சீசனில் ரவீந்திர ஜடேஜா சிறிது காலம் கேப்டனாக செயல்பட்டார். எனினும், எம்.எஸ். டோனி அதே சீசனில் சென்னை அணியை வழிநடத்த துவங்கினார். தற்போது சென்னை அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கேப்டன் மாறப்போகும் தகவல் தனக்கே தாமதமாகத் தான் தெரியும் என சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஒ. தெரிவித்துள்ளார்.

    2024 ஐ.பி.எல். தொடரின் கேப்டன்கள் பங்கேற்கும் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அந்த வகையில், போட்டோஷூட் துவங்க சிறிது நேரம் இருக்கும் போது தான், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்படுவார் என்ற தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    ×