என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்கள் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி
Byமாலை மலர்20 Jun 2017 4:19 AM GMT (Updated: 20 Jun 2017 4:19 AM GMT)
இந்திய அணி - நியூசிலாந்து அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து அணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஷெஸ்டர்பீல்டு :
11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது.
இதில் ஷெஸ்டர்பீல்டில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இங்கிலாந்து வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 30.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 130 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது.
இதில் ஷெஸ்டர்பீல்டில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இங்கிலாந்து வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 47.2 ஓவர்களில் 155 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 30.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. முதலில் ஆடிய இந்திய அணி 45.1 ஓவர்களில் 130 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 26.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X