என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் உலக கோப்பை"

    • இறுதி போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை.
    • உலக கோப்பை தொடரில் 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 298 ரன்கள் குவித்தது. பின்னர் 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியால் 246 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி கோப்பையை வென்று சாதனைப்படைத்துள்ளது.

    மகளிர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. பரிசுகளும் குவிந்து வருகின்றன. பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு மேல் பரிசு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான கிராந்தி கௌட்டுக்கு, மத்திய பிரதேச மாநில அரசு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

    மிதவேகப் பந்து வீச்சாளரான இவர் இறுதிப் போட்டியில் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் 6 ஓவர்கள் வீசி 58 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

    உலக கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    • இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் நாளை இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • இந்தியா முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

    மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பொதுவாக இந்திய ஆண்கள் அணி விளையாடும்போது, ரசிகர்கள் அதிக அளவில் நேரில் வந்து பார்ப்பார்கள். பெண் ரசிகர்களும் அதிக அளவில் திரள்வார்கள். இதனால் வீரர்களிடம் டிக்கெட் வாங்கித் தருமாறு நெருங்கிய வட்டாரங்கள் வேண்டுகோள் விடுக்கும். ஆனால், பெண்கள் கிரிக்கெட்டிற்கு அவ்வாறு கூடுவது கிடையாது.

    ஆனால், இந்த இறுதிப் போட்டியை பார்க்க ஏராளமானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இந்திய வீராங்கனைகளிடம் டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்யுமாறு பலர் அன்புத்தொல்லை கொடுப்பதாக ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    நெருக்கடி கிரிக்கெட்டில் மட்டுமல்ல, உலக கோப்பை இறுதி போட்டி டிக்கெட்டிற்கும்தான். இது சிறந்ததது. கிரிக்கெட் வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறி.

    "தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் வெற்றி பெறும்போது, நாம் அதிகமான மாற்றங்களை கிரிக்கெட்டில் பார்க்கலாம். கிரிக்கெட் இன்னும் அதிக வளர்ச்சியை பெறும். அது சர்வதேச அளவில் மட்டுமல்ல. உள்ளூர் அளவில் வளர்ச்சி பெறும். பெண்கள் கிரிக்கெட் இன்றும் அதிகமான சீரியஸ் தன்மை மற்றும் அதிக பார்வையாளர்களை பெறுவதை பார்க்க, நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.

    • வீராங்கனைகள் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் அத்துமீறல்.
    • ஆஸ்திரேலிய அணி மானேஜர் புகார் அளிக்க, போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

    மகளிர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த புதன்கிழமை இங்கே ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெற்றது. இன்று தனது கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதனால் ஆஸ்திரேலியா அணி போட்டி முடிந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது.

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்து மறுநாள், வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இருவர், தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அருகில் உள்ள கஃபே-க்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளனர்.

    அப்போது வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளார். அவர்கள் அருகில் வந்த வாலிபர், விரும்பத்தகாத வகையில் தொட்டுள்ளார். வீராங்கனைகள் சுதாரிப்பதற்குள் அந்த இடத்தில் இருந்து அவர் தப்பி சென்றுவிட்டார்.

    இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மானேஜர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இரு வீராங்கனைளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.

    மோட்டார் சைக்கிளின் நம்பரை வைத்து, போலீசார் குற்றவாளியை பிடித்துள்ளனர்.

    • 3 போட்டிகளில் மழையால் ரத்து செய்யப்பட்டன.
    • 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

    மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடைபெற்றன.

    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    பாகிஸ்தான் அணி இன்று இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. மழை குறுக்கீடு செய்ததால், ஆட்டம் 34 ஓவராக குறைக்கப்பட்டது. 4.2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருக்கும்போது, மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு, கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

    பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 7 லீக் போட்டிகளிலும் விளையாடிவிட்டன. இலங்கை 7 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 3 போட்டிகளில் முடிவு இல்லை ஆகிவற்றின்மூலம் 5 புள்ளிகள் பெற்றுள்ளது.

    பாகிஸ்தான் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை. 3 போட்டிகளில் முடிவு இல்லை என்பதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது.

    இன்றைய போட்டியுடன் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்து வீராங்கனை நைட் 109 ரன்கள் விளாசினார்.
    • இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    50 ஓவர் ஐசிசி மகளிர் உலக கோப்பையை இந்தியா நடத்தி வருகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடக்கிறது.

    இந்தூரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசித்துக் கொள்ள முடியும் என்பதால் வெற்றி பெறும் முனைப்போடு இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர்.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸ் 68 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ஹீதர் நைட் அபாரமாக விளையாடினார். அவர் 91 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 109 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்சிவர்-ப்ரன்ட் 49 பந்தில் 38 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 10 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • இந்தியாவின் தொடக்க ஜோடி 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.
    • ஸ்மிரிதி மந்தனா 80 ரன்களும், பிரதிகா ராவல் 75 ரன்களும் விளாசினர்.

    மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்தது.

    ஸ்மிரிதி மந்தனா ஆட்டமிழந்ததும், பிரதிகா ராவல் 96 பந்தில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுதது வந்த ஹர்லீன் தியோல் 42 பந்தில் 38 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 22 ரன்னில் வெளியேறினார்.

    ஜெமிமா ரோட்ரிக்ஸ் 21 பந்தில் 33 ரன்களும், ரிச்சா கோஷ் 22 பந்தில் 32 ரன்களும் சேர்க்க இந்தியா 48.5 ஓவரில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சுதர்லேண்டு 5 விக்கெட் சாய்த்தார். ஷோபி மொலினக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஒரே வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
    • 58 ரன்கள் எடுத்தபோது, 5 ஆயிரம் ரன்களை கடந்தார்.

    மகளிர் உலக கோப்பை தொடரில் இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியாவின் பிரதிகா ராவல், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்மிரிதி மந்தனா 66 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்தியா 24.3 ஓவரில் 155 ரன்கள் குவித்துள்ளது.

    ஸ்மிரிதி மந்தனா 58 ரன்களை கடக்கும்போது, ஒருநாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை தொட்டார். இதன்மூலம் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை தொட்ட வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

    மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த வருடத்தில் மட்டும் ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் ஆயிரம் ரன்களை கடந்த முதல்  வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    112 போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

    • ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்க 115 ரன்கள் எடுத்திருந்தது.
    • 9ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தது.

    மகளிர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் சிறப்பாக பந்து வீசினர். முதல் மூன்று விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர்.

    ஆனால் 4ஆவது வீராங்கனையாக களம் இறங்கிய பெத் மூனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 114 பந்தில் 109 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி வீராங்கனை அலனா கிங் 49 பந்தில் 51 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்துவிட்டது.

    பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. சித்ரா அமினை (35) தவி மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் சானா (11), நஷ்ரா சாந்து (11), ரமீன் ஷமிம் (20) இரட்டை இலக்க ரன்கள் அடிக்க 36.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணியில் கிம் கார்த் 3 விக்கெட்டும், மேகம் ஸ்கட் மற்றும் சுதர்லேண்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது.

    • வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை உலக கோப்பை தொடர் நடைபெறுகிறது.
    • இந்தியா முதல் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.

    பெண்களுக்கான 50 ஓவர் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா நடத்துகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கிறது. கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் கொழும்பு ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.

    இந்தியா தனது முதல் போட்டியில் இலங்கையுடன் மோதுகிறது. இந்த நிலையில் ஐசிசி உலக கோப்பைக்கான Anthem-ஐ ஐசிசி வெளியிட்டுள்ளது. இப்பாடலை இந்தியாவின் முன்னணி பின்னணி பாடகியான ஷ்ரேயா கோஷல் பாடியுள்ளார். இந்த பாடலுக்கான வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    தொடக்க விழாவிலும் ஷ்ரேயா கோஷலின் கலைநிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

    இந்திய பெண்கள் அணி இதுவரை ஐசிசி கோப்பையை வென்றதில்லை. 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 98 ரன்னில் தோல்வியடைந்தது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உறுதிப் போட்டிகளில் 9 ரன்களில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.

    • 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது.
    • பாகிஸ்தான் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடத்தப்படுகிறது.

    8 அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 13ஆவது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்துகிறது. 33 நாட்களாக நடைபெறும் இந்த மெகா தொடரில், 31 போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன.

    இந்த நிலையில் போட்டிக்கான நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இடம் பிடித்துள்ள 14 கள நடுவர்கள், நான்கு போட்டி நடுவர்கள் (match referee) என அனைவரும் பெண்கள் ஆவார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் கொண்ட நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.

    கள நடுவர்கள் பட்டியலில் கிளைர் போலாசாக், ஜேக்லின் வில்லியம்ஸ், சுயே ரெட்பெர்ன் உள்ளிட்ட சிறந்த பெண் கள நடுவர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே இரண்டு உலக கோப்பை தொடரில் நடுவர்களாக பணியாற்றியுள்ளனர். லாரன் அகன்பாக் என்பவர் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நடுவராக பணியாற்றியவர்.

    மகளிர் கிரிக்கெட்டின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம், விளையாட்டின் அனைத்துத் துறைகளிலும் இன்னும் பல வெற்றிக் கதைகளுக்கு வழி வகுக்கும் என்று ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    வருகிற 30ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் கொழும்பில் நடைபெற இருக்கிறது.

    இதற்கு முன்னதாக பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி, இரண்டு ஐசிசி பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரில் பெண்கள் மட்டுமே நடுவராக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WomensWorldT20 #WWT20 #EngvAUS

     

    பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நள்ளிரவு 1.30 மணிக்கு நடந்த முதல் அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் ஆஸ்திரேலியா மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்தது. ஹீலி 46 ரன்னும், லென்னிங் 31 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 17.3 ஓவரில் 71 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 71 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. 3 முறை சாம்பியனான (2010, 2012, 2014) ஆஸ்திரேலியா 5-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடந்த (2016) உலக கோப்பை இறுதிப் போட்டியில் வெஸ்ட்இண்டீசிடம் தோற்றதற்கு ஆஸ்திரேலியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.

    அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

    இதையடுத்து சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி இந்திய நேரடிப்படி வருகிற 25-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. #WomensWorldT20 #WWT20 #EngvAUS

    10 அணிகள் இடையிலான பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் நாளை மோதுகிறது. #HarmanpreetKaur #WomenWorldT20 #T20 #India

    கயானா:

    10 நாடுகள் பங்கேற்ற மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கியது.

    ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி நியூசிலாந்தை 34 ரன்னில் வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்து சாதனை புரிந்தார். அவர் 51 பந்தில் 103 ரன்னும், (7 பவுண்டரி, 8 சிக்கர்) ஜெமீமா 45 பந்தில் 59 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணியால் 9 விக்கெட் இழப்புக்கு 160 ரன்னே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனை பேட்ஸ் அதிகபட்சமாக 50 பந்தில் 67 ரன் (8 பவுண்டரி) எடுத்தார். பூனம்யாதவ், ஹேமலதா, தலா 3 விக்கெட்டும், ராதாயாதவ் 2 விக்கெட்டும், அருந்ததி ரெட்டி 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. பலவீனமான பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 2-வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 52 ரன்னில் பாகிஸ்தானையும், வெஸ்ட் இண் டீஸ் 60 ரன் வித்தியாசத்தில் வங்காள தேசத்தையும் வீழ்த்தின.

    இன்று நடைபெறும் 4-வது ‘லீக்’ ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. #HarmanpreetKaur #WomenWorldT20 #T20 #India

    ×