search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்றார்
    X

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா பதவியேற்றார்

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையரான சுதிர் பார்கவாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #ChiefInformationCommissioner #SudhirBhargava #RamnathKovind
    புதுடெல்லி:

    நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பெயர்களை அறிவித்துள்ளது.

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட சுதிர் பார்கவாவுக்கு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

    மேலும், ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்ட செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். #ChiefInformationCommissioner #SudhirBhargava #RamnathKovind
    Next Story
    ×