search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sudhir bhargava"

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையரான சுதிர் பார்கவாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #ChiefInformationCommissioner #SudhirBhargava #RamnathKovind
    புதுடெல்லி:

    நாட்டின் தலைமை தகவல் ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர், தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய ஆணையர்களும், தலைமை ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக பெயர்களை அறிவித்துள்ளது.

    நாட்டின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்ட சுதிர் பார்கவாவுக்கு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

    மேலும், ஓய்வுபெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்ட செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தகவல் ஆணையர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். #ChiefInformationCommissioner #SudhirBhargava #RamnathKovind
    மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார். #CIC #SudhirBhargava
    புதுடெல்லி:

    தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பொதுமக்கள் விபரங்களை பெற மனு செய்யும் மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையர் உள்பட 11 பேர் பணியாற்ற வேண்டும். ஆனால், தற்போது 3 தகவல் ஆணையர்கள் மட்டுமே உள்ளனர்.

    இந்த விவகாரத்தை முன்வைத்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் தொடர்ந்த வழக்கில் உடனடியாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இந்த நியமனங்களில் வெளிப்படைத்தன்மை கையாளப்பட வேண்டும் என சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.
     
    இதைதொடர்ந்து, புதிதாக மேலும் 4  தகவல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்தது. யாஷ்வர்தன் குமார் சின்கா, வனஜா என்.சர்னா, நீரஜ் குமார் குப்தா, சுரேஷ் சந்திரா ஆகிய 4 தகவல் ஆணையர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.



    இதற்கிடையில், மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்த ஆர்.கே.மாத்தூர் பணி ஓய்வு பெற்ற பின்னர் அந்த பதவிக்கான புதிய நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்லைன் மூலம் இந்த பதவிக்காக விண்ணப்பித்திருந்த 65 பேரில் தகுதி அடிப்படையில் சுதிர் பார்கவா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #CIC #SudhirBhargava 
    ×