search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான 4 பேரை படத்தில் காணலாம்
    X
    கைதான 4 பேரை படத்தில் காணலாம்

    மணமக்களை ஏற்றி செல்வதுபோல் காரை அலங்கரித்து செம்மரம் கடத்தல் - 4 பேர் கைது

    திருப்பதி அருகே திருமணம் செய்த புதுமண தம்பதிகளை ஏற்றி செல்வது போல காரை அலங்கரித்து செம்மரம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். #RedSandalwood
    திருமலை:

    திருப்பதி அருகே உள்ள மங்கலம் திருமலா நகரில் இருந்து சேஷாசலம் வனப்பகுதிக்கு செல்லும் மெயின்ரோட்டில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    திருமண அலங்காரத்துடன் பிடிபட்ட கார்

    அப்போது மணமக்களை ஏற்றி செல்வது போன்ற அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்று வந்தது. மார்கழி மாதம் திருமணம் எதுவும் நடக்காது.

    திருமண சீசன் முடிந்த நிலையில் அலங்காரத்துடன் சென்ற கார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    அப்போது காரில் செம்மரம் கடத்துவது தெரியவந்தது. அதிலிருந்த 10 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதனை கடத்தி வந்த சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த துரைவேலு (24), திலீப்குமார் (23), தேஜா (25), மஸ்தான் (24) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. திலீப்குமார் மீது கொலை வழக்கு உள்ளது. சமீபத்தில் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வந்தார். செம்மரம் எங்கு கடத்தி செல்லப்பட்டது. ஏஜெண்டுகள் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.  #RedSandalwood


    Next Story
    ×