என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதாவை விட ராகுல்காந்திதான் இந்து ஆதரவாளராக செயல்படுகிறார்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தாக்கு
Byமாலை மலர்7 Dec 2018 7:02 AM GMT (Updated: 7 Dec 2018 7:02 AM GMT)
பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் தான் இந்துக்களுக்கு ஆதரவானதாக செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கோவில்களுக்கும், மடங்களுக்கும் அடிக்கடி சென்று வழிபட்டார். நெற்றியில் குங்குமம் திலகமிட்டுக் கொண்டார்.
இந்துக்களுக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி செயல்படுவதாக கூறப்படுவதால் ராகுல்காந்தியும் போட்டிக்காக இந்து கோவில்களுக்கு சென்றார். தற்போது 5 மாநில சட்டசபை தேர்தலிலும் ராகுல்காந்தி கோவில்களுக்கு சென்றார்.
ராகுல்காந்தியின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான பிப்பிள்ஸ் டெமாக்ரசியில் எழுதியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். இதன் மூலம் அவர் பா.ஜனதாவை விட காங்கிரஸ் தான் இந்துக்களுக்கு ஆதரவானதாக இருக்கிறது என்பதை காட்டிக்கொள்கிறார்.
மத்தியப் பிரதேசதேர்தல் அறிக்கையில் கிராமம் தோறும் கோ சாலை (பசு இருப்பிடம்) அமைப்போம், பசு ஹோமியம் விற்பனை, ராமவனம் காக்கும் திட்டம் என்றும், ராஜஸ்தானில் பள்ளிகளில் வேதபாடம் கற்பிக்கப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
இது போன்ற இந்துத்துவா நடவடிக்கைகள் மூலம் பா.ஜனதாவை தோற்கடித்து விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் பா.ஜனதாவோ இந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு இன்மை, விவசாயிகள் பிரச்சினை, ஊழல் போன்றவற்றால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress, #BJP #MarxistCommunist
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கோவில்களுக்கும், மடங்களுக்கும் அடிக்கடி சென்று வழிபட்டார். நெற்றியில் குங்குமம் திலகமிட்டுக் கொண்டார்.
இந்துக்களுக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி செயல்படுவதாக கூறப்படுவதால் ராகுல்காந்தியும் போட்டிக்காக இந்து கோவில்களுக்கு சென்றார். தற்போது 5 மாநில சட்டசபை தேர்தலிலும் ராகுல்காந்தி கோவில்களுக்கு சென்றார்.
ராகுல்காந்தியின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான பிப்பிள்ஸ் டெமாக்ரசியில் எழுதியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். இதன் மூலம் அவர் பா.ஜனதாவை விட காங்கிரஸ் தான் இந்துக்களுக்கு ஆதரவானதாக இருக்கிறது என்பதை காட்டிக்கொள்கிறார்.
மத்தியப் பிரதேசதேர்தல் அறிக்கையில் கிராமம் தோறும் கோ சாலை (பசு இருப்பிடம்) அமைப்போம், பசு ஹோமியம் விற்பனை, ராமவனம் காக்கும் திட்டம் என்றும், ராஜஸ்தானில் பள்ளிகளில் வேதபாடம் கற்பிக்கப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
இது போன்ற இந்துத்துவா நடவடிக்கைகள் மூலம் பா.ஜனதாவை தோற்கடித்து விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் பா.ஜனதாவோ இந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு இன்மை, விவசாயிகள் பிரச்சினை, ஊழல் போன்றவற்றால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress, #BJP #MarxistCommunist
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X