search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி ராமர்கோவில் விவகாரம்: சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து - காங்கிரஸ் விளக்கம்
    X

    அயோத்தி ராமர்கோவில் விவகாரம்: சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து - காங்கிரஸ் விளக்கம்

    அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் விளக்கம் அளித்துள்ளார். #RamTemple #ShashiTharoor #Congress
    புதுடெல்லி:

    சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஆனால் யாரும் ஒருவருடைய வழிபாட்டு தளத்தை இடித்து தள்ளிவிட்டு கோவில் கட்ட விரும்பமாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

    சசிதரூரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜனதா, இதுபற்றி காங்கிரஸ் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கோரியது.

    இதையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. கோவில் கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு எந்த முடிவை எடுத்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். இதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று குறிப்பிட்டார்.

    இதுபற்றி சசிதரூர் வெளியிட்ட அறிக்கையில், “எனது வார்த்தைகள் சில ஊடகங்களில் திரித்து கூறப்பட்டு உள்ளது. ராமர்கோவில் பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்தை கேட்டதற்கு பதில் சொன்னேன். காங்கிரஸ் சார்பாகவும் இதை நான் பேசவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். #RamTemple #ShashiTharoor #Congress 
    Next Story
    ×