search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக முதல்வருடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு -  தென்னிந்திய கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி
    X

    கர்நாடக முதல்வருடன் ஆந்திர முதல்வர் சந்திப்பு - தென்னிந்திய கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி

    ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல்மந்திரி குமாரசாமியை இன்று சந்தித்து தென்னிந்திய கட்சிகள் ஒன்றிணைவது குறித்து ஆலோசனை நடத்தினார். #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    ஐதராபாத்:

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கனகதுர்கா ஆலையத்துக்கு வழிபட வந்த கர்நாடக மாநில முதல்மந்திரி குமாரசாமியை ஆந்திர மாநில முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், தென்னிந்திய கட்சிகள் அனைத்தும் ஓரணியாக இணைவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுமார் 40 நிமிடம் நடைபெற்ற இந்த சந்திப்பை அடுத்து, இதுதொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக இருவரும் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. #KarnatakaCM #Kumaraswamy #AndhraCM #ChandrababuNaidu
    Next Story
    ×