search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவுக்கு கூடுதல் உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் - ராகுல் காந்தி
    X

    கேரளாவுக்கு கூடுதல் உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் - ராகுல் காந்தி

    மழை வெள்ள பாதிப்புகளை இரண்டாவது நாளாக பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவுக்கு மத்திய அரசு கூடுதல் உதவிகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். #KeralaFloods #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 100 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். தற்போது அங்கு மழை ஓய்ந்து நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கேரள மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனாலும் அங்கு ஏற்பட்ட பாதிப்பு மிகவும் அதிகம் என்பதால் பல ஆயிரம் மக்கள் இன்னும் முகாம்களிலேயே முடங்கி உள்ளனர்.

    கேரள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று கேரளா சென்றார். அவர், செங்கனூர், ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களுக்கு சென்று முகாம்களில் தங்கி உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    கேரள வெள்ளத்தின் போது, மீனவர்கள் அந்த மாநில மக்களை மீட்க எடுத்த முயற்சிகளை ராகுல்காந்தி பாராட்டினார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது மீனவளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    மேலும் ஹெலிகாப்டரிலும் சென்று வெள்ள சேதங்களை பார்வையிட்டார். செங்கனூர் கல்லூரியில் உள்ள முகாமில் தங்கி இருந்த மக்களை சந்தித்து விட்டு அங்குள்ள ஹெலிபேடு தளத்திற்கு ராகுல்காந்தி சென்றார்.

    இந்த நிலையில் இன்று 2-வது நாளாக கேரள வெள்ள சேதங்களை ராகுல்காந்தி பார்வையிட்டார். அவர், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவருடன் கேரள காங்கிரஸ் தலைவர்களும் சென்றனர். மேலும் கோழிக் கோட்டில் நிவாரண முகாம் களில் தங்கி உள்ள பொதுமக்களையும் ராகுல்காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது, “கேரள வெள்ளத்தை அரசியலாக்க விரும்பவில்லை. மிகமோசமாக இம்மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு கூடுதல் உதவிகளை வழங்க வேண்டும்” என கூறினார். 
    Next Story
    ×