search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 ஆறுகள், 9 கி.மீ., தூரம் கடந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்
    X

    3 ஆறுகள், 9 கி.மீ., தூரம் கடந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்

    தொடர் கனமழை காரணமாக, வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், 3 ஆறுகள், 9 கி.மீ., தூரத்தை கடந்து கர்ப்பிணி பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். #Assam #Uttarakhand
    இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளாவில் பெய்து வரும் பலத்த மழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

    அதேபோல் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்கள் முழுவதிலும் உள்ள ஏரிகள், ஆறுகள் நிறைந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். 

    அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் லகிம்பூர் மாவட்டம் ஜுகிபரி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், 9 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு கை வண்டியில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 



    ஜுகிபரி பகுதியில் சரியான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் வெள்ளம் பாய்ந்தோடும் 3 ஆறுகள் மற்றும் 9 கிலோமீட்டர் தூரத்தை கடந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    அதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பிதோகார்க் மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவரை அந்த ஊர் மக்கள் சுமார் 11 கிலோமீட்டர் தூரம் மலைப்பகுதி வழியாக தூக்கிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். #Assam #Uttarakhand

    Next Story
    ×