search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி
    X

    நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி

    நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். #NoConfidenceMotion #RahulGandhi #NarendraModi
    புதுடெல்லி:
     
    பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று காலை நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்காமல் கூட்டணி கட்சியான சிவசேனா கட்சியினர் புறக்கணித்தனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று பேசினார். 
    அப்போது அவர் பேசுகையில், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார் மோடி. விவசாயிகளும், இளைஞர்களும் மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மேலும், நான் பிரதமர் இல்லை. பிரதம சேவகன் என்றார் மோடி. அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?

    பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்.

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் மூலம் மோடியின் நண்பர் பலனடைந்துள்ளார். என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேசவேண்டும்; ஆனால் அதை தவிர்க்கிறார். பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது 

    ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும் என்றார்.

    அமித்ஷா மகன் குறித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்த போது மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து சபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

    இடைவேளைக்கு பின்னர் பேசிய ராகுல் காந்தி, என் மீது உங்களுக்கு கோபம் உள்ளது. நீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம். ஆனால், நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன்.

    அவை ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.


    தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  #NoConfidenceMotion #RahulGandhi  #NarendraModi 
    Next Story
    ×