
திருப்பதி கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. சேவை வரியில் இருந்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு விலக்கு இருந்து.
இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட வில்லை. திருப்பதி தேவஸ்தானம் ஜி.எஸ்.டி.யில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு வரிவிலக்கு அளிக்க மறுத்தது.

இதனை மேற்கோள் காட்டி திருப்பதி தேவஸ்தானம் திருப்பதியிலும் நாள்தோறும் 1 லட்சம் பக்தர்களுக்கு மேல் அன்னதானம் வழங்குகின்றோம். இதனால் எங்களுக்கும் ஜி.எஸ்.டியில் இருந்து வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த கோரிக்கையை ஏற்று திருப்பதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து வரி விலக்கு அளிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அன்னதான திட்டத்திற்கு வாங்கப்படும் மூலப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.30 கோடி வரை வரிவிலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Tirupati #TirupatiTemple #GST #GSTTAX #Food