search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில்  துணிகரம் - சொத்து பிரச்னைக்காக டாக்டர் மீது துப்பாக்கி சூடு
    X

    டெல்லியில் துணிகரம் - சொத்து பிரச்னைக்காக டாக்டர் மீது துப்பாக்கி சூடு

    தலைநகர் டெல்லியில் சொத்து பிரச்னை காரணமாக காரில் வந்த டாக்டர் மீது துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    புதுடெல்லி:

    டெல்லியின் தெற்கில் கடாய்பூர் பகுதியில் டாக்டர் ஒருவர் தனது சகோதரர்களுடன் நேற்று இரவு காரில் வந்து கொண்டிருந்தார்.
    அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் டாக்டர் வந்த கார் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது.

    காரில் இருந்த டாக்டரும் பதிலுக்கு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த டாக்டரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
       
    விசாரணையில், சொத்து தகராறு தொடர்பாக டாக்டர் மீது துப்பாக்கி சூடு நடந்தது தெரிய வந்தது. மேலும், சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    #Tamilnews
    Next Story
    ×