search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை- போலீஸ் அதிரடி தாக்குதல்
    X

    சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை- போலீஸ் அதிரடி தாக்குதல்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு மாநில போலீசார் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையின்போது 7 மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொன்றனர். #SevenNaxals #Naxalskilled #Chhattisgarh
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் நாசவேலைகளில் ஈடுபடும் மாவோயிஸ்டுகளை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் மாவோயிஸ்டுகளை தனிப்படை போலீசார் அழித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தெலுங்கானா எல்லையை ஒட்டியுள்ள பிஜப்பூர் மாவட்டம் இபந்தா கிராமம் அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தெலுங்கானா நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் சத்தீஸ்கர் போலீசார் இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஒரு பெண் மாவோயிஸ்ட் உள்பட 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. சண்டை நடந்த பகுதியில் இருந்து சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுகிறது. #SevenNaxals #Naxalskilled #Chhattisgarh
    Next Story
    ×