என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடத்தையில் சந்தேகம்- கள்ளக்காதலியை கொன்று காதலன் தற்கொலை
Byமாலை மலர்22 April 2018 10:17 AM GMT (Updated: 22 April 2018 10:17 AM GMT)
கேரள மாநிலத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை கொன்று காதலன் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கொடுங்கத்தூரை சேர்ந்தவர் சசி. இவரது மகள் மீரா (வயது 24). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளனர்.
பாலக்காடு கோல்பாடம் பகுதியை சேர்ந்தவர் சுபீர் என்பவரின் மகன் நவ்பல் (32). இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் மீராவுக்கும், நவ்பலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் குடும்பத்தை தவிக்க விட்டு கொச்சிக்கு சென்றனர்.
அங்கு போனேகரை மீன்ரோடு என்ற இடத்தில் வாடகைக்கு குடியேறினர். நவ்பல் அங்குள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் மீராவின் நடத்தையில் நவ்பலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மீரா கடைத்தெருவிற்கு சென்றார். அங்கு ஒரு வாலிபருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். இதனை வேலை முடிந்து அந்த வழியே வந்த நவ்பல் பார்த்து விட்டார். இருவரும் வீட்டுக்கு வந்தபோது இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நவ்பல் தனது சகோதரிக்கு போன் செய்து மீராவை கொலை செய்து விட்டு தானும், தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன்படி நேற்று இரவு மீராவை கத்தியால் சரமாரியாக நவ்பல் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் மீரா இறந்தார்.
மீராவை கொலை செய்த பின்னர் மீண்டும் தனது சகோதரிக்கு போன் செய்து மீராவை கொன்று விட்டேன். கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு நானும் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
அதிர்ச்சியடைந்த சகோதரி அங்குள்ள நண்பர் மூலம் தொடர்பு கொண்டு நவ்பல் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி நண்பர் பார்த்தபோது வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது.
ஜன்னலை உடைத்து பார்த்தபோது மீரா ரத்த வெள்ளத்திலும், நவ்பல் மணிக்கட்டு அறுத்த நிலையில் தூக்குப்போட்டும் இறந்தது தெரியவந்தது. மீராவின் 1½ வயது குழந்தை மட்டும் தாய் இறந்தது தெரியாமல் அங்கேயே இருந்தது.
இதனையடுத்து எலம்பக்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டு கலமசேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கொடுங்கத்தூரை சேர்ந்தவர் சசி. இவரது மகள் மீரா (வயது 24). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளனர்.
பாலக்காடு கோல்பாடம் பகுதியை சேர்ந்தவர் சுபீர் என்பவரின் மகன் நவ்பல் (32). இவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் மீராவுக்கும், நவ்பலுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் குடும்பத்தை தவிக்க விட்டு கொச்சிக்கு சென்றனர்.
அங்கு போனேகரை மீன்ரோடு என்ற இடத்தில் வாடகைக்கு குடியேறினர். நவ்பல் அங்குள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் மீராவின் நடத்தையில் நவ்பலுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மீரா கடைத்தெருவிற்கு சென்றார். அங்கு ஒரு வாலிபருடன் அவர் பேசிக்கொண்டிருந்தார். இதனை வேலை முடிந்து அந்த வழியே வந்த நவ்பல் பார்த்து விட்டார். இருவரும் வீட்டுக்கு வந்தபோது இது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நவ்பல் தனது சகோதரிக்கு போன் செய்து மீராவை கொலை செய்து விட்டு தானும், தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார். அதன்படி நேற்று இரவு மீராவை கத்தியால் சரமாரியாக நவ்பல் குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் மீரா இறந்தார்.
மீராவை கொலை செய்த பின்னர் மீண்டும் தனது சகோதரிக்கு போன் செய்து மீராவை கொன்று விட்டேன். கை மணிக்கட்டை அறுத்துக்கொண்டு நானும் தற்கொலை செய்யப்போகிறேன் என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
குழந்தையுடன் மீராவின் தந்தை சசி.
அதிர்ச்சியடைந்த சகோதரி அங்குள்ள நண்பர் மூலம் தொடர்பு கொண்டு நவ்பல் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார். அதன்படி நண்பர் பார்த்தபோது வீடு உள்பக்கம் பூட்டியிருந்தது.
ஜன்னலை உடைத்து பார்த்தபோது மீரா ரத்த வெள்ளத்திலும், நவ்பல் மணிக்கட்டு அறுத்த நிலையில் தூக்குப்போட்டும் இறந்தது தெரியவந்தது. மீராவின் 1½ வயது குழந்தை மட்டும் தாய் இறந்தது தெரியாமல் அங்கேயே இருந்தது.
இதனையடுத்து எலம்பக்கரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களையும் மீட்டு கலமசேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X