search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி புழுதிப்புயல் - 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பபட்டன
    X

    டெல்லி புழுதிப்புயல் - 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பபட்டன

    டெல்லியில் ஏற்பட்ட புழுதிப்புயலால் சுமார் 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Delhi
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியின் அக்பர் சாலை, ராஜேந்திர பிரசாத் மார்க், ஆர்.கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று மாலை வானிலை திடீரென மாறத்தொடங்கியது. கரும் இருள் எங்கும் சூழ்ந்தவாறு இருந்த நிலையில், வேகமான காற்றுடன் புழுதிப்புயல் வீசத்தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை ஏற்பட்ட புழுதிப்புயலால் சுமார் 29 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டன என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, இந்திராகாந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், நேற்று மாலை 5.45 மணி முதல் இரவு 7.25 மணி வரை பல்வேறு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதில் காத்மாண்டுவில் இருந்து வந்த நேபாளம் ஏர்லைன்ஸ் உள்பட பல விமானங்கள் அடங்கும். மேலும், 12 விமானங்கள் அமிர்தசரசுக்கும், 8 விமானங்கள் லக்னோவுக்கும் திருப்பி விடப்பட்டன என தெரிவித்துள்ளனர். #Delhi #Storm #TamilNews
    Next Story
    ×