search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
    X

    ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

    ஜம்மு-காஷ்மீரின் பத்காம் பகுதியில் பாதுகாப்பு படையினர் உடனான துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டான். #JammuKashmir #Budgamencounter

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பத்காம் மாவட்டத்தில் உள்ள பீர்வாஹ் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

    அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதி தப்பி செல்ல முயன்றுள்ளான். அவனை பிடிக்க பாதுகாப்பு படையினர் முயற்சி செய்துள்ளனர். தப்பியோட முயன்ற அந்த பயங்கரவாதி பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு இளம்பெண் காயமடைந்தார். அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்டவனிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். 

    அந்த பயங்கரவாதி யார், எந்த அமைப்பை சேர்ந்தவன் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. #JammuKashmir #Budgamencounter #tamilnews
    Next Story
    ×