search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
    X

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

    உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், இன்று இரவு மீண்டும் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #ManoharParrikar
    பனாஜி:

    உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், இன்று இரவு மீண்டும் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #ManoharParrikar

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு கடந்த 15-ம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, உயர் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதையடுத்து, உடல்நலம் தேறிய மனோகர் பாரிக்கர் கடந்த 22-ம் தேதி கோவா திரும்பினார். பிற்பகலில் சட்டசபை சென்று பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார்.

    இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர், இன்று மாலை மீண்டும் கோவா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், மனோகர் பாரிக்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவர் இன்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தனர். #ManoharParrikar #TamilNews
    Next Story
    ×