search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லியில் துணிகரம் - முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி 2 பேர் படுகொலை
    X

    டெல்லியில் துணிகரம் - முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி 2 பேர் படுகொலை

    தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நேற்று இரவு முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
     
    டெல்லியின் நரேலா பகுதியில் ஒரு கும்பல் நேற்று இரவு நடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மற்றொரு கும்பல் அவர்கள் மீது கத்தியால் குத்தியது.

    இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 2 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்றொருவரை அக்கம் பக்க்த்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    தகவலறிந்து நரேலா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கத்திக்குத்தில் இறந்தவர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முன்விரோதம் காரணமாக இருதரப்புக்கு இடையே நடந்த மோதல் என்பதும், கத்திக்குத்தில் இறந்தது கோவிந்த் (25), சதீஷ் (40)  என்பதும், காயமடைந்தவர் முகேஷ் (30) என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தலைநகர் டெல்லியில் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி 2 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×