என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீநகரில் சி.ஆர்.பி.எப் முகாமை தாக்கிய லஷ்கர் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
Byமாலை மலர்13 Feb 2018 10:25 AM GMT (Updated: 13 Feb 2018 10:25 AM GMT)
ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.பி.எப் முகாமில் நேற்று தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தாய்பா இயக்க தீவிரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள கரன்நகரில் சி.ஆர்.பி.எப் முகாம் உள்ளது. நேற்று காலை இங்கு நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தியதும் தப்பி ஓடிவிட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வீரர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து, தப்பி ஓடிய தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தாக்குதல் நடத்திய இரு தீவிரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐ.ஜி தெரிவித்துள்ளார். அவர்கள் லஷ்கர் இ தாய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuAndKashmir #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X