என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘இது வெறும் தொடக்கம்தான், மாற்றத்திற்கான புயல் வரும்’ - ஜிக்னேஷ் மேவானி
Byமாலை மலர்19 Dec 2017 4:58 AM GMT (Updated: 19 Dec 2017 4:58 AM GMT)
குஜராத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வத்காம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானி, நாடு மாற்றத்திற்கு தயாராகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
காந்திநகர்:
குஜராத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் ஜிக்னேஷ் மேவானி. உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பேரணி பிரம்மாண்ட பேரணியை நடத்திகாட்டினார்.
இதனையடுத்து, குஜராத் தேர்தலிலும் அவர் களமிறங்கினார். காங்கிரஸ் கட்சி மேவானிக்கு ஆதரவு அளித்த நிலையில், வத்காம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தினார். வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிக்னேஷ் மேவானி, இது வெறும் தொடக்கம் தான் என்றும் மாற்றத்திற்கான புயல் வரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், “நாடு மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. இல்லையென்றால் 150 இடங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியவர்கள் 99 இடங்களை மட்டுமே ஜெயிக்க முடியுமா?” என்றும் குறிப்பிட்டுள்ளார். வரும் சனிக்கிழமை மக்களுக்கு நன்றி கூறும் வகையில் பேரணி நடத்தவும் மேவானி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குஜராத்தில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் ஜிக்னேஷ் மேவானி. உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பேரணி பிரம்மாண்ட பேரணியை நடத்திகாட்டினார்.
இதனையடுத்து, குஜராத் தேர்தலிலும் அவர் களமிறங்கினார். காங்கிரஸ் கட்சி மேவானிக்கு ஆதரவு அளித்த நிலையில், வத்காம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்தினார். வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜிக்னேஷ் மேவானி, இது வெறும் தொடக்கம் தான் என்றும் மாற்றத்திற்கான புயல் வரும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், “நாடு மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. இல்லையென்றால் 150 இடங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியவர்கள் 99 இடங்களை மட்டுமே ஜெயிக்க முடியுமா?” என்றும் குறிப்பிட்டுள்ளார். வரும் சனிக்கிழமை மக்களுக்கு நன்றி கூறும் வகையில் பேரணி நடத்தவும் மேவானி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X