என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி: கள்ளக் காதலனோடு இருந்ததை பார்த்த மகள் - பிளேடால் கழுத்தை அறுத்து கொன்ற கொடூர தாய்
Byமாலை மலர்15 Dec 2017 6:04 PM GMT (Updated: 15 Dec 2017 6:04 PM GMT)
கள்ளக் காதலனோடு இருந்ததை பார்த்த தனது மகளை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லி அருகில் உள்ளது காஜியாப்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னிதேவி (30). இவரது மகள் காஜல் (6). கடந்த சில தினங்களுக்கு முன், தனது மகள் காஜலை காணவில்லை என்று உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் போட்டோவை வாட்ஸ் அப் உள்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் அனுப்பியும், பல வீடுகளுக்கு நேரடியாக சென்றும் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறுமி காஜல், தனது வீட்டின் அருகில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சிறுமி கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்ட போலீசார். சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையின்போது தனது மகளுக்கு யாரோ செய்வினை வைத்து கொலை செய்ததாக முன்னிதேவி கூறினார். மேலும் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் போலீசாருக்கு முன்னிதேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கண்காணித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில், முன்னிதேவியை தனது மகளை கொன்று நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
போலீசாரிடம் முன்னிதேவி அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:
சம்பவம் நடந்த தினத்தன்று எனது கணவர் அலுவலகத்துக்கு சென்றார். அவர் சென்றதும் எனது காதலனோடு வீட்டின் மொட்டை மாடியில் தனியாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த காஜல் நான் தனியாக வேறு ஒருவருடன் பேசியதை பார்த்து விட்டார்.
இதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என கூறினேன். ஆனாலும், இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பெற்ற மகள் என்றும் பாராமல் எனது காதலருடன் சேர்ந்து காஜலை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் முன்னிதேவி மற்றும் அவரது காதலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக் காதலனோடு இருந்ததை பார்த்ததால், மகள் என்றும் பாராமல் பெற்ற தாயே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லி அருகில் உள்ளது காஜியாப்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னிதேவி (30). இவரது மகள் காஜல் (6). கடந்த சில தினங்களுக்கு முன், தனது மகள் காஜலை காணவில்லை என்று உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் போட்டோவை வாட்ஸ் அப் உள்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில் அனுப்பியும், பல வீடுகளுக்கு நேரடியாக சென்றும் விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறுமி காஜல், தனது வீட்டின் அருகில் சடலமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சிறுமி கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்ட போலீசார். சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையின்போது தனது மகளுக்கு யாரோ செய்வினை வைத்து கொலை செய்ததாக முன்னிதேவி கூறினார். மேலும் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதனால் போலீசாருக்கு முன்னிதேவி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரை கண்காணித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இறுதியில், முன்னிதேவியை தனது மகளை கொன்று நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
போலீசாரிடம் முன்னிதேவி அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:
சம்பவம் நடந்த தினத்தன்று எனது கணவர் அலுவலகத்துக்கு சென்றார். அவர் சென்றதும் எனது காதலனோடு வீட்டின் மொட்டை மாடியில் தனியாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த காஜல் நான் தனியாக வேறு ஒருவருடன் பேசியதை பார்த்து விட்டார்.
இதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என கூறினேன். ஆனாலும், இந்த விவகாரம் கணவருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பெற்ற மகள் என்றும் பாராமல் எனது காதலருடன் சேர்ந்து காஜலை பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் முன்னிதேவி மற்றும் அவரது காதலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக் காதலனோடு இருந்ததை பார்த்ததால், மகள் என்றும் பாராமல் பெற்ற தாயே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X