search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக மாநிலத்தில் ரவுடி மீது துப்பாக்கிசூடு - 2 போலீசாரும் காயம்
    X

    கர்நாடக மாநிலத்தில் ரவுடி மீது துப்பாக்கிசூடு - 2 போலீசாரும் காயம்

    கர்நாடக மாநிலத்தில் ரவுடி மீது துப்பாக்கிசூடு நடத்தியதில் 2 போலீசார் காயம் அடைந்தனர். போலீசார் தற்காப்புக்காக சுட்டதில் ரவுடியின் காலில் குண்டு பாய்ந்தது.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலம் கல்புரகியை சேர்ந்தவர் எசவந்த். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்ட விரோதமாக துப்பாக்கிகளையும் விற்பனை செய்து வந்த இவரை கர்நாடக போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் குல்பர்கா அருகே இவர் பதுங்கி இருப்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் இவரை விரட்டியபோது போலீசார் மீது துப்பாக்கியால் ரவுடி துப்பாக்கியால் சுட்டான். போலீசாரும் திருப்பி சுட்டனர். இதில் ரவுடி எசவந்த் காலில் குண்டு பாய்ந்தது. 2 போலீசார் காயம் அடைந்தனர்.

    இவர்கள் 3 பேரும் குல்பர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    Next Story
    ×