என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தற்போதைய சூழ்நிலையில் பேரறிவாளனை விடுவிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
Byமாலை மலர்12 Dec 2017 7:51 AM GMT (Updated: 12 Dec 2017 7:51 AM GMT)
ராஜீவ் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை காரணமாக அவர் சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப் பட இருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
அதே நேரத்தில் வெடிகுண்டு தொடர்பான சி.பி.ஐ. சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிடம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை காரணமாக அவர் சென்னை புழல் சிறைக்கு விரைவில் மாற்றப் பட இருக்கிறார்.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் “வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரி நான் வாங்கி கொடுத்தது என்பது நிரூபிக்கப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசு பேரறிவாளனை விடுவிக்க விரும்புகிறதா? இல்லையா? என்று கேள்வி எழுப்பியது. இது குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. தற்போதைய சூழலில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுவிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
அதே நேரத்தில் வெடிகுண்டு தொடர்பான சி.பி.ஐ. சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை பேரறிவாளன் தரப்பிடம் வழங்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X