என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களியக்காவிளை அருகே திருமணமான 6 மாதத்தில் கர்ப்பிணி தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்13 Nov 2017 8:25 AM GMT (Updated: 13 Nov 2017 8:25 AM GMT)
களியாக்காவிளை அருகே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கர்ப்பிணி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
களியக்காவிளை அருகே உள்ள கேரள மாநில பகுதியான பாறசாலையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). இவரது மனைவி காயத்திரி (25). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடை பெற்றது.
அருண்குமார் பாறசாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். காயத்திரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கணவர் வீட்டில் தூக்குபோட்டு காயத்திரி தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் கணவரின் வரதட்சணை கொடுமை காரணமாகத்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக காயத்திரியின் தந்தை குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் பாறசாலை போலீசிலும் புகார் செய்தார். தனது மகளை அவரது கணவர் அருண்குமார் திருமணத்திற்கு பிறகு கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் இதுபற்றி தங்களிடம் கூறி மகள் அழுததாகவும் அவரை தாங்கள் சமாதானப்படுத்தினோம்.
இந்த நிலையில் கணவரின் கொடுமை தாங்காமல் காயத்திரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்று அந்த புகாரில் கூறி உள்ளனர்.
இதுபற்றி பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் காயத்திரியின் கணவர் அருண்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
களியக்காவிளை அருகே உள்ள கேரள மாநில பகுதியான பாறசாலையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). இவரது மனைவி காயத்திரி (25). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடை பெற்றது.
அருண்குமார் பாறசாலையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். காயத்திரி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கணவர் வீட்டில் தூக்குபோட்டு காயத்திரி தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் கிடைத்ததும் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு சென்று மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.
மேலும் கணவரின் வரதட்சணை கொடுமை காரணமாகத்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக காயத்திரியின் தந்தை குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் பாறசாலை போலீசிலும் புகார் செய்தார். தனது மகளை அவரது கணவர் அருண்குமார் திருமணத்திற்கு பிறகு கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும் இதுபற்றி தங்களிடம் கூறி மகள் அழுததாகவும் அவரை தாங்கள் சமாதானப்படுத்தினோம்.
இந்த நிலையில் கணவரின் கொடுமை தாங்காமல் காயத்திரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். என்று அந்த புகாரில் கூறி உள்ளனர்.
இதுபற்றி பாறசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் காயத்திரியின் கணவர் அருண்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X