என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார்- மாமியாரை கொன்ற பெண்
Byமாலை மலர்14 Sep 2017 7:02 AM GMT (Updated: 14 Sep 2017 7:02 AM GMT)
பாலக்காடு அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மாமனார், மாமியாரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது தோலனூர். இந்த பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 72). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மனைவி பிரேமகுமாரி (66). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
மூத்த மகன் பிரதீப்குமார். இவர் குஜராத்தில் தனியே தங்கி வேலை பார்த்து வருகிறார். பிரதீப்குமாரின் மனைவி ஷீஜா (35). இவர் தோலனூரில் வசித்து வருகிறார்.
நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் பால் வினியோகம் செய்ய ராணுவ அதிகாரி வீட்டுக்கு வந்தார். அப்போது ஷீஜா ஒரு அறையில் வாயில் துணி திணித்தபடி, கைகால் கட்டப்பட்டு கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த பால் வியாபாரி ராஜலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது ராணுவ அதிகாரி சாமிநாதன் படுகாயங்களுடனும் அவரது மனைவி பிரேமகுமாரி தலையணையால் அழுத்து கொலை செய்யப்பட்டும் கிடந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாயில் துணி திணித்து கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்த ஷீஜாவை மீட்டு விசாரணை நடத்தியபோது அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியபோது ஷீஜாவுக்கும் சுதர்சனம் (53) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாகவும். இது குறித்து மாமனார், மாமியாருக்கு தெரியவந்ததும் அவர்கள் கண்டித்தனர் என்றும், இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து ஷீஜாவின் செல்போனை ஆய்வு செய்தபோது சுதர்சனம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ஷீஜாவுக்கு அவரது கணவர் புதிய வீடு கட்டிக்கொடுத்தார். அதில் ஷீஜா தனியே வசித்து வந்தார். கள்ளக்காதலன் சுதர்சனம் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். தகவல் அறிந்ததும் மாமனார், மாமியார் தட்டிக்கேட்டனர்.
இது குறித்து ஷீஜா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மாமனார், மாமியாரை தீர்த்துக்கட்டுவது என்று திட்டம் தீட்டினர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் ஷீஜா படுக்காமல் மாமனார், மாமியார் வீட்டிற்கு தூங்க சென்றார். 11 மணிக்கு மேல் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். ஷீஜா கதவை திறந்து விட்டார்.
பின்னர் இருவரும் சேர்ந்து மாமியாரை தலையணையால் அழுத்தியும், மாமனாரை கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். ஷீஜா மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க சுதர்சனம் அவரது வாயில் துணியை திணித்து கை, கால்களை கட்டிப்போட்டுள்ளார்.
ஷீஜாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் தான் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுதர்சனம் மீது ஏற்கனவே வெடி பொருட்கள் கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது தோலனூர். இந்த பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 72). ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவரது மனைவி பிரேமகுமாரி (66). இவர்களுக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
மூத்த மகன் பிரதீப்குமார். இவர் குஜராத்தில் தனியே தங்கி வேலை பார்த்து வருகிறார். பிரதீப்குமாரின் மனைவி ஷீஜா (35). இவர் தோலனூரில் வசித்து வருகிறார்.
நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் பால் வினியோகம் செய்ய ராணுவ அதிகாரி வீட்டுக்கு வந்தார். அப்போது ஷீஜா ஒரு அறையில் வாயில் துணி திணித்தபடி, கைகால் கட்டப்பட்டு கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த பால் வியாபாரி ராஜலட்சுமி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது ராணுவ அதிகாரி சாமிநாதன் படுகாயங்களுடனும் அவரது மனைவி பிரேமகுமாரி தலையணையால் அழுத்து கொலை செய்யப்பட்டும் கிடந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வாயில் துணி திணித்து கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்த ஷீஜாவை மீட்டு விசாரணை நடத்தியபோது அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியபோது ஷீஜாவுக்கும் சுதர்சனம் (53) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருப்பதாகவும். இது குறித்து மாமனார், மாமியாருக்கு தெரியவந்ததும் அவர்கள் கண்டித்தனர் என்றும், இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து ஷீஜாவின் செல்போனை ஆய்வு செய்தபோது சுதர்சனம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து போலீசார் கூறியதாவது:-
ஷீஜாவுக்கு அவரது கணவர் புதிய வீடு கட்டிக்கொடுத்தார். அதில் ஷீஜா தனியே வசித்து வந்தார். கள்ளக்காதலன் சுதர்சனம் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். தகவல் அறிந்ததும் மாமனார், மாமியார் தட்டிக்கேட்டனர்.
இது குறித்து ஷீஜா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் மாமனார், மாமியாரை தீர்த்துக்கட்டுவது என்று திட்டம் தீட்டினர்.
அதன்படி சம்பவத்தன்று இரவு தனது வீட்டில் ஷீஜா படுக்காமல் மாமனார், மாமியார் வீட்டிற்கு தூங்க சென்றார். 11 மணிக்கு மேல் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். ஷீஜா கதவை திறந்து விட்டார்.
பின்னர் இருவரும் சேர்ந்து மாமியாரை தலையணையால் அழுத்தியும், மாமனாரை கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். ஷீஜா மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க சுதர்சனம் அவரது வாயில் துணியை திணித்து கை, கால்களை கட்டிப்போட்டுள்ளார்.
ஷீஜாவுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் தான் அவர் மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சுதர்சனம் மீது ஏற்கனவே வெடி பொருட்கள் கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X