என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோர்ட்டு உத்தரவுகளை வலைத்தள பக்கத்தில் வெளியிட சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு
Byமாலை மலர்17 Aug 2017 10:11 PM GMT (Updated: 17 Aug 2017 10:11 PM GMT)
பொதுமக்களின் நலன் கருதி கோர்ட்டு உத்தரவுகளை சென்னை ஐகோர்ட்டு தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடவேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
புதுடெல்லி:
மத்திய தகவல் ஆணையத்தில் ஆர்.கே.ஜெயின் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுவில், ஐகோர்ட்டு மற்றும் கீழ்க்கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4-வது பிரிவு வகை செய்கிறது என்றும், ஆனால் சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்கும் பல உத்தரவுகள் ஐகோர்ட்டின் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்படுவது இல்லை என்றும் கூறி இருந்தார். எனவே, கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடுமாறு ஐகோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.
ஆர்.கே.மாதுர்
இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாதுர், பொதுமக்களின் நலன் கருதி கீழ்க்கோர்ட்டுகள் மற்றும் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை சென்னை ஐகோர்ட்டு தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டார். அப்படி அந்த உத்தரவுகளை வெளியிடுவது பொதுமக்கள், வழக்கு தொடர்வோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பயன்அளிப்பதாகவும், உதவியாகவும் இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
மத்திய தகவல் ஆணையத்தில் ஆர்.கே.ஜெயின் என்பவர் தாக்கல் செய்த ஒரு மனுவில், ஐகோர்ட்டு மற்றும் கீழ்க்கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4-வது பிரிவு வகை செய்கிறது என்றும், ஆனால் சென்னை ஐகோர்ட்டு பிறப்பிக்கும் பல உத்தரவுகள் ஐகோர்ட்டின் வலைத்தள பக்கத்தில் வெளியிடப்படுவது இல்லை என்றும் கூறி இருந்தார். எனவே, கோர்ட்டுகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடுமாறு ஐகோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.
ஆர்.கே.மாதுர்
இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே.மாதுர், பொதுமக்களின் நலன் கருதி கீழ்க்கோர்ட்டுகள் மற்றும் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை சென்னை ஐகோர்ட்டு தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டார். அப்படி அந்த உத்தரவுகளை வெளியிடுவது பொதுமக்கள், வழக்கு தொடர்வோர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பயன்அளிப்பதாகவும், உதவியாகவும் இருக்கும் என்றும் அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X